இராவணா என்ற பெயர் எவ்வாறு ஒரு பௌத்த அமைப்புக்கு பொருந்தும் என்று பிரதமர் டி எம் ஜெயரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.
இராவணன், மிகப்பெரிய வீரனாக கருதப்படுகிறார். எனினும் அவர் பெண் ஒருவரை கடத்திச்சென்ற குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது.
அது பௌத்த தர்மத்துக்கு எதிரான செயல். இந்தநிலையில் பௌத்தபிக்குகள் எவ்வாறு “இராவணா பலய” என்ற பெயரை தமது அமைப்புக்கு வைத்துள்ளார்கள் என்று பிரதமர் வினவினார்.
இராவணா பலய சுமத்திய குற்றச்சாட்டின்படி தமது கேட்டல் உணர்வில் குறைபாடு இருந்தாலும் கண் பார்வை தெளிவாகவே உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
புத்தசாசன அமைச்சு பிரதமரிம் இருந்து பறிக்கப்படவேண்டும் என்ற இராவணா பலயவின் கோரிக்கை தொடர்பிலேயே பிரதமர் இந்தக் கருத்தை வெளியிட்டார்..
http://www.tamilwin.com/show-RUmsyITcLdnv1.html
Geen opmerkingen:
Een reactie posten