[ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014, 09:34.06 AM GMT ]
கொலன்னாவை நகர சபையின் தலைவராக இருக்கும் ரவீந்திர உதயசாந்த என்பவர், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு நெருக்கமானவர்.
இதனைப் பயன்படுத்திக் கொண்டு இவர் பிரதேசத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் முறைகேடான நகரசபை நிர்வாகம் மூலம் பெருந்தொகைப் பணத்தை கையாடியுள்ளார்.
இவற்றுக்கெல்லாம் மேலதிகமாக பிரதேசத்தில் குப்பை கூளங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்களிடம் இருந்தும் அவர் பெருந்தொகையொன்றை கமிஷனாக வசூலிக்கின்றார். இதன் காரணமாக அந்நிறுவனங்கள் தமது பணியை செவ்வ்னே நிறைவேற்றுவதில்லை.
நகரசபைத் தலைவரின் இந்த நடவடிக்கைகளை பிரதித் தலைவர் சுரேஷ் கோதாகொட கடுமையாக எதிர்த்து வந்துள்ளார். இது இரண்டு தரப்பினருக்கும் இடையில் கடும் முறுகலை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் பிரதித் தலைவர் சுரேஷ் கோதாகொட, நகர சபைத்தலைவர் மற்றும் அவரது ஆதரவாளர்களால் கடுமையாகத்தாக்கப்பட்டுள்ளார். பொலிசாரின் முன்னிலையில் இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும் பொலிசார் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துள்ளனர்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள சுரேஷ் கோதாகொட, நகர சபைத் தலைவர் சுரேஷ் கோதாகொட சட்டவிரோத ஆயுதங்களை தன் வசம் வைத்திருப்பதாகவும், போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
தன் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்திலும் நகர சபை தலைவர் கைத்துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தியதாகவும், ஆனால் பொலிசார் அவருக்கு ஆதரவாக செயற்பட்டதாகவும் அவர் தொடர்ந்தும் குற்றம் சாட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITYLcep3.html
நாமல் ராஜபக்ஷவின் செயல் அருவருக்கத்தக்கது: ஐ.தே.கட்சி (செய்தித் துளிகள்)
[ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014, 09:47.45 AM GMT ]
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பாடகர் இராஜ் வீரரத்ன ஆகியோரின் செயல் அருவருக்கத்தக்கது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பாடகர் இராஜ் வீரரத்ன ஆகியோர் கொழும்பில் உள்ள பெண்கள் பாடசாலைகள் சிலவற்றுக்கு சென்று றகர் ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது பாடகர் தனது பாடலுக்கான இசையை கையடக்க தொலைபேசி மூலம் ஒலிபரப்பி பாடியுள்ளார்.
பாடலில் அடங்கியுள்ள வார்த்தைகளான எனது ஸ்வீட் மெனிகா உம்மா தருங்கள் என்ற வரிகளை மாணவிகள் முன்னால் பாடியது அருவருக்கத்தக்கது.
பாடசாலைகளில் உள்ள நூலகங்களுக்கு புத்தகங்களை அன்பளிப்பு செய்ய அக்கறை காட்டுபவர்கள் மற்றும் நாடகங்களை நடத்துபவர்கள் கூட பாடசாலைகளுக்குள் செல்வதற்கு கல்வியமைச்சின் அனுமதியை பெற வேண்டியது அவசியம்.
பாடசாலைகளின் ஒழுக்கத்தை பாதுகாக்கவே இந்த சட்டத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான சூழ்நிலையில், கொழும்பில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலைகளுக்குள் பாடகருடன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சென்றமையானது பாடசாலையின் ஒழுக்கத்தை மீறும் செயல்.
இதற்கு இடமளித்த பாடசாலைகளின் அதிபர்களின் நடவடிக்கைகளை கண்டிக்கின்றோம்.
இந்த றகர் ஊக்குவிப்பு வேலைத்திட்டம் நடைபெற்ற பாடசாலைகளின் பெயர் பலகைகளை ஒளிப்பதிவு செய்ய ஊடகவியலாளர்களுக்கு பாடசாலை அதிகாரிகள் அனுமதி வழங்காது அவர்கள் திட்டியுள்ளனர். இதனையும் நாங்கள் கண்டிக்கின்றோம் எனவும் அகில விராஜ் காரியவசம் கூறியுள்ளார்.
மகிந்தவை தொடர்ந்தும் ஆட்சியில் வைத்திருக்க தீர்மானித்துள்ள ஜே.வி.பி
நீண்டகால சாதக நிலைமை தமது கட்சிக்கு கிடைக்கும் என்று எண்ணி வரும் ஜே.வி.பி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை தொடர்ந்தும் ஆட்சி அதிகாரத்தில் வைத்திருக்க தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் உட்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது சம்பந்தமான ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஊடகங்களிடம் உறுதியாக தமது கட்சியின் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.
பொது வேட்பாளராக போட்டியிட உள்ளதாக கூறப்பட்டு வரும் ரணில் விக்ரமசிங்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சரத் பொன்சேகா, ஷிராணி பண்டாரநாயக்க, மாதுளுவாவே சோபித தேரர் இவர்களில் எவருக்கும் ஜே.வி.பி ஆதரவு வழங்காது என அவர் உறுதிப்பட கூறியுள்ளார்.
ஊடகங்களிடம் ஜே.வி.பியின் இந்த தீர்மானத்தை அறிவித்து விட்டு மறுநாள் அதிகாலை அனுராகுமார திஸாநாயக்க 70 லட்சம் ரூபா பெறுமதியான தனது டொயோட்டா கெப் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்தை எதிர்நோக்கினார்.
அதேவேளை ஜே.வி.பியின் அரசியல் சபை உறுப்பினரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான கே.டி. லால்காந்த நேற்று வெளியான பத்திரிகை ஒன்றிடம் அனுரகுமார வெளியிட்டிருந்த கருத்து நிகரான கருத்தை வெளியிட்டிருந்தார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிப்பதை விரும்பாதது போல் கருத்து வெளியிட்டுள்ள அவர், தற்போது இருப்பது நிறைவேற்று அதிகாரம் இல்லை எனவும் அது அரைகுறை நிறைவேற்று அதிகாரம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழித்து விட்டு நாடாளுமன்றத்திற்கு நிறைவேற்று அதிகாரத்தை வழங்குவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு பதிலாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட நாடாளுமன்றத்தை ஏற்படுத்துவதாகும் எனவும் லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் ஜே.வி.பி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி ஒழிப்பதற்கும் பொது வேட்பாளருக்கும் எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ந்தும் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை தக்கவைக்க முயற்சித்து வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது.
ராஜபக்ஷ அரசாங்கத்தின் சகல சூறையாடல்களுக்கு அனுசரணை வழங்கி, தோல்வியான அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் இலங்கையின் பணத்தை சுருட்டி வரும் சீனாவின் அழுத்தமே ஜே.வி.பியின் இந்த தீர்மானத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
சீனா, ஜே.வி.பியின் செலவுகளுக்கு எனக் கூறி அந்த கட்சியின் இன்றைய தலைவருக்கு நிதியுதவியை வழங்கி வருகிறது. இதனால் சீனாவின் அழுத்தங்களை மீறி ஜே.வி.பியின் தலைவர்களுக்கு செயற்பட முடியாது என அந்த கட்சியின் உட்தரப்பு தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.
சீனா, ஜே.வி.பியின் செலவுகளுக்கு எனக் கூறி அந்த கட்சியின் இன்றைய தலைவருக்கு நிதியுதவியை வழங்கி வருகிறது. இதனால் சீனாவின் அழுத்தங்களை மீறி ஜே.வி.பியின் தலைவர்களுக்கு செயற்பட முடியாது என அந்த கட்சியின் உட்தரப்பு தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.
கஞ்சா போதைப்பொருளுடன் இலங்கை அகதிகள் கைது
தமிழகத்தில் மூன்று இலங்கை தமிழ் அகதிகள் பெருந்தொகை கஞ்சா போதைப்பொருளுடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 44 கிலோ கிராம் கஞ்சாவுடன் மதுரையில் கைது செய்யப்பட்டதாக மதுரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன் பெறுமதி 44 லட்சம் ரூபா என பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேக நபர்கள் இந்த கஞ்சாவை மண்டபம் கரையில் இருந்து இலங்கை கடத்திச் செல்ல திட்டமிட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் தேனி மற்றும் ஆந்திர பிரதேசத்தில் உள்ள கஞ்சா போதைப்பொருள் வலையமைப்புடன் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
நாகப்பட்டினம் மீனவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைப்பு
இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்ட இந்திய மீனவர்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஊர்காவற்துறைக்கு வடக்கில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது, இந்த இந்திய மீனவர்கள் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் தமிழகத்தின் நாகப்பட்டினம் பிரதேசத்தை சேர்ந்த மீனவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyITYLcep5.html
Geen opmerkingen:
Een reactie posten