தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 6 augustus 2014

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பயின்ற இரு தமிழ் மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர்!

குறுஞ்செய்தி மூலம் வதந்தி பரப்பிய 4 முஸ்லிம்கள் கைது
[ புதன்கிழமை, 06 ஓகஸ்ட் 2014, 12:58.58 PM GMT ]
செல்போன் குறுஞ்செய்தி மூலம் வதந்திகளை பரப்பிய குற்றச்சாட்டில் 4 முஸ்லிகள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஓகஸ்ட் 10 ஆம் திகதிக்கு பின்னர், முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மற்றுமொரு தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்து இந்த குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
இந்த குறுஞ்செய்தி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்த குறுஞ்செய்தி, இலங்கையில் தடை செய்யப்பட்ட செய்தி இணையத்தளங்களில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டுள்ளது.
மேற்படி குறுஞ்செய்தி முற்றிலும் பொய்யான, அடிப்படையற்ற குறுஞ் செய்தியாகும்.
குவைத்தில் இருக்கும் இலங்கையரான றிஸ்வான் என்பவர், நீர்கொழும்பில் உள்ள ஒருவருக்கு இந்த குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார்.
இது குறித்து சந்தேக நபர்களை கைது செய்யும் முன்னர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இந்த விடயம் குறித்து விசாரணை நடத்தியிருந்தனர்.
அளுத்கம, பேருவளை, தர்கா நகர் பகுதிகளில் ஏற்பட்ட வன்முறை மோதல்களின் பின்னர், வதந்திகளை பரப்பும் நபர்களுக்கு எதிராக பொலிஸ் தலைமையகம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது எனவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITaLdnq0.html

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பயின்ற இரு தமிழ் மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர்
[ புதன்கிழமை, 06 ஓகஸ்ட் 2014, 11:40.30 AM GMT ]
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டில் பயின்று வந்த யோகராஜா நிரோஷன் மற்றும் அதே ஆண்டில் பயிலும் மற்றுமொரு தமிழ் மாணவன் நேற்று பரீட்சை எழுதிக் கொண்டிருந்தபோது கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த மாணவர்கள் இருவரும் நேற்று முற்பகல் 11 மணி மற்றும் 12 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் கடத்தச் செல்லப்பட்டுள்ளதாகவும், இதனை பல்கலைக்கழக நிர்வாகம் அறிந்து வைத்திருந்ததாகவும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.
கடத்தப்பட்ட மாணவர்களின் அடையாள அட்டைகளை பல்கலைக்கழக நிர்வாகம் தனது பொறுப்பில் எடுத்து கொண்டுள்ளது.
இதன் பின்னர் நிர்வாகத்திடம் கேள்விகளை எழுப்பியதை தொடர்ந்தும் மேற்படி இரு மாணவர்களும் சமனல கந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியம் கைது செய்யப்பட்ட மாணவர்கள் குறித்து சமனலகந்த பொலிஸார் தகவல் கேட்ட போது அது பற்றி கேட்க வேண்டாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து சங்கத்தின் உறுப்பினர்கள் பலாங்கொட பொலிஸ் நிலையத்தில் மாணவர்கள் பற்றி விசாரித்த போது, அவர்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
மாணவர்கள் கைது செய்யப்பட்ட 24 மணிநேரம் கடந்துள்ள நிலையில், அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை என்பதுடன் மாணவர்களுக்கோ, பெற்றோருக்கோ அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம் பற்றி அறிவிக்கவில்லை என்றும் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் யாழ். முகமாலை பிரதேசத்தை சேர்ந்த ஒரு தமிழ் மாணவர் அண்மையில் மாணவர் விடுதியில் தங்கியிருந்த போது தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyITaLdnp7.html

Geen opmerkingen:

Een reactie posten