தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 9 augustus 2014

புகலிடக் கோரிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரிக்கை

பாதுகாப்பு அமைச்சு கடுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது
பாதுகாப்பு அமைச்சு கடுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சு கடுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அதிருப்தி அளிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சில் இந்திய பிரதமருக்கு எதிராக கட்டுரை வெளியிடப்பட்டு அதன் பின்னர் மன்னிப்பு கோரியமை ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என சுட்டிக்காட்டிள்ளது.

நாட்டின் ஏனைய அரசாங்க நிறுவனங்களைப் போன்றே பாதுகாப்பு அமைச்சும் அரசியல் மயப்படுத்தப்பட்டு;ள்ளதாக குறிப்பிட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்துமாறு பாதுகாப்பு அமைச்சரான மஹிந்த ராஜபக்ஷவே உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தன்னைத் தானே விசாரணை செய்து கொள்கின்றாரா என ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. சகோதரர் கோதபாய ராஜபக்சவின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தப்படுமா என ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
09 Aug 2014

புகலிடக் கோரிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரிக்கை
இலங்கையில் புகலிடம் கோரியுள்ள வெளிநாட்டு பிரஜைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் பிரஜைகளை நாடு கடத்தும் திட்டத்தை கைவிடுமாறு புகலிடக் கோரிக்கையாளர் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக இடைநிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுவதனை தடுத்து நிறுத்தும் நோக்கில், புகலிடக் கோரிக்கையாளர் ஆர்வலர்கள் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர். இலங்கையின் முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

நிமால்கா பெர்னாண்டோ, குருகுலசூரிய மரியாஸ் ருக்ஷான், மினாலி மானேல் பெரேரா, மாரிமுத்து சத்திவேலு, பியர் ரிச்சர்ட்ஸ் மற்றும் பிரபாத் சுதர்சனா ஆகியோர் புகலிடக் கோரிக்கையாளர்களின் சார்பில் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளனர். பாகிஸ்தானில் சிறுபான்மையினரே இவ்வாறு அடைக்கலம் கோரி வருவதாகத் தெரிவித்துள்ளனர். மத ரீதியாக தாம் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
09 Aug 2014

Geen opmerkingen:

Een reactie posten