தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 3 augustus 2014

இந்தியா ஒதுங்குகிறதா பதுங்குகிறதா?

மகரகம பொது வர்த்தக நிலைய கட்டிடத்தில் தீ- இம்மாத இறுதியில் இலங்கை- இந்திய மீனவர் பேச்சு
[ ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2014, 05:41.33 AM GMT ]
மகரகம நகரில் உள்ள பொது வர்த்தக நிலைய கட்டிடத் தொகுதியில் தீ பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை 10.15 அளவில் இந்த தீ ஏற்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இரண்டு மாடிகளை கொண்ட இந்த வர்த்தக கட்டிடத் தொகுதியில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்தில் தீ ஏற்பட்டதுடன் அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருதற்கான முயற்சிகளில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இம்மாத இறுதியில் இலங்கை- இந்திய மீனவர் பேச்சு
இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை இந்த மாதம் இறுதியில் இடம்பெறலாம் என்று இலங்கையின் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கான அனுமதி இந்திய தரப்பில் இருந்தும் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 93 தமிழக மீனவர்களும் அவர்களின் படகுகளும் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு பின்னரே விடுவிக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எந்த ஒரு தருணத்திலும் இலங்கை கடலில் பிரவேசிக்கும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்துக்கு முன்னால் நிறுத்தப்படுவர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்று தமிழக மீனவர்கள் கச்சதீவுக்கு சென்று தஞ்சம் கோரிய போராட்டத்தை நடத்துவதாக அறிவித்தமையை அடுத்து இலங்கை கடற்படையினர் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyITXLcft7.html
கோத்தபாயவுக்கு கீழ்ப்படியாத பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு இடமாற்றம்
[ ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2014, 06:24.57 AM GMT ]
பாரிய கொழும்பு பிரதேசத்திற்கு பொறுப்பாக பணியாற்றிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுமித் எதிரிசிங்க மற்றும் களுத்துறை மற்றும் பாணந்துறை பிரதேசங்களுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
களுத்துறை மற்றும் பாணந்துறை பிரதேசங்களுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபராக பணியாற்றிய வீ. இந்திரன் பொலிஸ் தலைமையகத்தின் நலன்புரி நடவடிக்கைகளுக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுமித் எதிரிசிங்கவின் இடமாற்றத்தை அடுத்து கல்கிஸ்ஸ மற்றும் நுகேகொட பிரதேசங்களுக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபராக ஜீ.டி.ஏ.கே. சேனாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
அளுத்கம, பேருவளை மற்றும் தர்கா நகர் பிரதேசங்களில் அண்மையில் ஏற்பட்ட இன மோதல்களுடன் தொடர்புடைய பொதுபல சேனா அமைப்பின் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களை விடுவிக்குமாறு மேலிடத்தில் இருந்து உத்தரவிடப்பட்ட போதும், அவர்களை விடுவிக்க பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்திரன் மறுத்திருந்தார்.
இதனையடுத்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் மற்றுமொரு பொலிஸ் உயர் அதிகாரி தலையிட்டு பொதுபல சேனா அமைப்புடன் தொடர்புடையவர்களை விடுதலை செய்ததாக கூறப்பட்டது.
இதனடிப்படையிலேயே பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்திரனின் இடமாற்றம் நடந்துள்ளதாக பொலிஸ் தரப்பில் பேசப்பட்டு வருகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyITXLcfuy.html
கந்தளாயில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இராணுவ வீரர்
[ ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2014, 06:44.28 AM GMT ]
திருகோணமலை மாவட்டம் கந்தளாய் அக்போபுர இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ வீரர் ஒருவர், கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இராணுவ சீருடையுடன் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆனமடுவ பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான இராணுவ வீரரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
விடுமுறையில் வீட்டுக்கு சென்றிருந்த அவர் பணிக்கு திரும்பிய அடுத்த நாள், இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
தற்கொலைக்கான காரணம் அறிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyITXLcfuz.html
ஹிருணிக்காவுக்கு இன்னொரு காதல்! என்ன செய்யப் போகிறார் நாமல்?
[ ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2014, 08:32.40 AM GMT ]
ஜனாதிபதியின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்ஷவின் முன்னாள் காதலி ஹிருணிக்கா, புதிய காதல் தொடர்பொன்றைக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
படுகொலை செய்யப்பட்ட ஜனாதிபதி ஆலோசகரும், முன்னாள் அரசியல்வாதியுமான பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் மகள் ஹிருணிக்கா, தற்போது மேல் மாகாண சபை உறுப்பினராக இருக்கிறார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருந்த காலத்தில், பாரத லக்ஷ்மன் அவரது தொழில் சங்க செயலாளராக இருந்தார். அக்காலத்தில் அடிக்கடி அலரி மாளிகைக்கு வந்து போய்க்கொண்டிருந்த ஹிருணிக்காவின் அழகில் மயங்கிய நாமல், அவர் மீது தீராக் காதல் கொண்டிருந்தார்.
இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியான பின், பாரத லக்ஷ்மன் குடும்பம் தமது அந்தஸ்துக்குப் பொருத்தமற்றது என்று கூறி ஜனாதிபதியின் பாரியார் தமது மகனின் காதலைப் பிரித்துவிட்டார்.
அதன் பின் மேல்படிப்புக்காக வெளிநாடு சென்ற ஹிருணிக்கா, தனது தந்தையின் படுகொலையின் பின் தீவிர அரசியலில் இறங்கி, மாகாண சபை உறுப்பினர் பதவியையும் கைப்பற்றியுள்ளார்.
இதற்கிடையே மாகாண சபையில் அவரது பக்கத்து ஆசனத்தில் அமர்ந்திருக்கும் சேனால் வெல்கமவுடன் அவர் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஹிருணிக்காவின் புதிய காதலர் சேனால், அமைச்சர் குமார வெல்கமவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் காதலை அமைச்சர் குமார வெல்கமவும் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இதற்கிடையே தனது முன்னாள் காதலியை முழுமையாக மறக்க முடியாமல் தவிக்கும் நாமலுக்கு, ஹிருணிக்காவின் புதிய காதல் தொடர்பு கடும் சோகத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிய வந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITXLcfu1.html
இந்தியா ஒதுங்குகிறதா பதுங்குகிறதா?
[ ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2014, 09:14.16 AM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் புது­டில்­லிக்­கான பயணம் எப்­போது சாத்­தி­ய­மாகும் என்ற கேள்வி பல வாரங்­க­ளாகத் தொடர்ந்து கொண்­டி­ருக்­கி­றது.
ஏனென்றால், இனப்­பி­ரச்­சினைத் தீர்வு தொடர்­பாக இந்­திய மத்­திய அர­சாங்­கத்­துடன் பேச்­சுக்­களை நடத்­து­வ­தற்­காக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நீண்­ட­கால­மா­கவே முயற்­சி­களை மேற்­கொண்டு வந்­தி­ருக்­கி­றது.
குறிப்­பாக, வடக்கு மாகா­ண­சபை நிறு­வப்­பட்ட பின்னர், ஏற்­பட்­டுள்ள சூழல் குறித்தும், நிலை­யான அர­சியல் தீர்வு காண்­பது குறித்தும், வடக்­கி­லுள்ள நிலை­மைகள் குறித்தும் இந்­தி­யா­வுடன் பேசு­வ­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஆர்வம் கொண்­டி­ருக்­கி­றது.
முன்­னைய காங்­கிரஸ் கட்சி தலை­மை­யி­லான அர­சாங்கம் பத­வியில் இருந்த போது, இந்­தியப் பிர­தமர் மன்­மோ­கன்­ சிங்கைச் சந்­தித்துப் பேச்சு நடத்­து­வ­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. ஆனால், அது சாத்­தி­ய­மா­வ­தற்குள், அந்த அரசின் ஆயுள் முடிந்து போனது.
இந்­திய நாடா­ளு­மன்றத் தேர்தல் நடந்து கொண்­டி­ருந்த போதே, புதிய அரசு அமைந்­த­வுடன், புது­டில்­லி­யுடன் பேச்சு நடத்­துவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வர்கள் தெரி­வித்­தி­ருந்­தனர்.
இந்­தியப் பிர­த­ம­ராக நரேந்­திர மோடி தெரிவு செய்­யப்­பட்­டதும், அவ­ருக்கு வாழ்த்துத் தெரி­வித்து, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் இரா. சம்­பந்­தனும், வடக்கு மாகா­ண­ச­பையின் சார்பில் முத­ல­மைச்சர் சீ.வி.விக்­னேஸ்­வ­ரனும் கடி­தங்­களை அனுப்­பி­யி­ருந்­தனர்.
அந்தக் கடி­தங்­களில், பிர­தமர் நரேந்­திர மோடியைச் சந்­தித்துப் பேசு­வ­தற்கு விருப்பம் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது.
அதே­வேளை, நரேந்­திர மோடியின் பத­வி­யேற்பு விழா­வுக்குச் சென்ற போது, ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச, தன்­னுடன் துணைக்கு வரு­மாறு வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னுக்கு அழைப்பு விடுத்­தி­ருந்தார். ஆனால், அதனை அவர் நிரா­க­ரித்­து­விட்டார்.
ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்­தது போலவே, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் பத­வி­யேற்பு விழா­வுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்ற கோரிக்­கைகள் தமிழ்­நாட்டில் எழுந்த போதும், அதனை இந்­திய அர­சாங்கம் நிரா­க­ரித்து விட்­டது.
சார்க் தலை­வர்­க­ளுக்கு மட்டும் விடுக்­கப்­பட்ட அழைப்பே அது­வாகும். வெளி­நா­டு­களில் இருந்து வேறு எவரும் அழைக்­கப்­ப­ட­வில்லை.
தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, அந்த நிகழ்­வுக்குத் தம்மை அழைக்க வேண்டும் என்று எதிர்­பார்த்­த­தாகத் தெரி­ய­வில்லை. அவ்­வாறு எதிர்­பார்த்­தி­ருந்தால், அது அவர்­களின் முட்­டாள்­தனம்.
எனினும், கூடிய விரைவில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி அழைத்துப் பேசுவார் என்று ஊகங்கள் தெரி­விக்­கப்­பட்­டன.
ஆனால், கடந்த மே மாத இறு­தியில் தான் பத­வி­யேற்ற நரேந்­திர மோடியின் தலை­மை­யி­லான புதிய அர­சாங்கம் நிலை­மை­களை அவ­தா­னித்து, தமது வழக்­க­மான பணி­களை ஆரம்­பிக்க எப்­ப­டியும், ஜூலை மாத­மாகி விடும் என்று அப்­போதே தக­வல்கள் கசிந்­தி­ருந்­தன.
இப்­போது, ஜூலை முடிந்து ஓகஸ்ட் மாதமும் வந்து விட்­டது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்­கான அழைப்பு மட்டும் இன்­னமும் இந்­திய அர­சாங்­கத்­திடம் இருந்து வர­வில்லை.
இதற்­கி­டையில், ஜூலை நடுப்­ப­கு­தியில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன், முத­ல­மைச்சர் சீ.வி.விக்­னேஸ்­வரன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மாவை சேனா­தி­ராசா, சுரேஷ் பிரே­மச்சந்­திரன், செல்வம் அடைக்­க­ல­நாதன் ஆகி­யோரைக் கொண்ட குழு, புது­டில்லி செல்­ல­வுள்­ள­தாக முதலில் தக­வல்கள் வெளி­யா­கின.
அப்­போது, புது­ டில்­லி­யி­லி­ருந்து, தமது கோரிக்­கைக்கு சாத­க­மான பதில் கிடைத்­துள்­ள­தா­கவும்,  எனினும், இந்­தியப் பிர­த­மரைச் சந்­திப்­ப­தற்­கான நாள் குறித்து, இன்­னமும் அறி­விக்­கப்­ப­ட­வில்லை என்றும், நாடா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்­தி­ருந்தார்.
இந்­த­நி­லையில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நரேந்­திர மோடியைச் சந்­திக்க இம்­மாத தொடக்­கத்தில் புது­டில்லி செல்­ல­வுள்­ள­தாக மீண்டும் கடந்­த­வாரம் ஊட­கங்­களில் தக­வல்கள் வெளி­யா­கின.
ஆனால், புது­டில்­லியில் இருந்து அழைப்பு ஏதும் வர­வில்லை என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மாவை சேனா­தி­ரா­சாவும், செல்வம் அடைக்­க­ல­நா­தனும் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.
ஆக, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பிர­தி­நி­தி­களை புது­டில்­லிக்கு அழைக்க இந்­திய அர­சாங்கம் இன்­னமும் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை என்­பது உறு­தி­யா­கி­யி­ருக்­கி­றது.
எதற்­காக இந்த தாமதம் - ஏன் இந்­திய அர­சாங்கம் இழுத்­த­டிக்­கி­றது என்ற கேள்­விகள் இப்­போது மெல்ல மெல்ல எழும்பத் தொடங்­கி­யுள்­ளன.
ஏனென்றால், பா.ஜ.க. அர­சாங்­கத்தின் வெளி­வி­வ­காரக் கொள்கை தொடர்­பாக – இலங்கை விவ­கா­ரத்தில் அதன் நிலைப்­பாடு தொடர்­பாக வெளி­யாகும் தக­வல்கள், சில சந்­தே­கங்­களை ஏற்­ப­டுத்­தவே செய்­கி­றது.
குறிப்­பாக, பா.ஜ.கவின் வெளி­வி­வ­காரக் கொள்கைப் பிரிவைச் சேர்ந்த கலா­நிதி சேஷாத்ரி ராமா­னுஜன் சாரி, வெளி­யிட்­டுள்ள கருத்து இங்கு முக்­கி­ய­மா­னது.
தமிழர் பிரச்­சினை என்­பது இலங்­கையின் உள்­நாட்டு விவ­காரம் என்றும், அது சர்­வ­தேச மயப்­ப­டுத்­தப்­படக் கூடாது என்­பதே பா.ஜ.க. அரசின் நிலைப்­பாடு என்றும் அவர் கூறி­யி­ருக்­கிறார்.
அந்த வகையில் பார்க்­கும்­ போது, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை புது­டில்­லிக்கு அழைத்துப் பேசு­வது, பாஜ­கவின் வெளி­வி­வ­காரக் கொள்­கைக்கு முர­ணா­னது.
அதற்­காகத் தான், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு அழைப்பு விடுக்­காமல் புது­டில்லி காலம் தாழ்த்தி வரு­கி­றதா என்ற சந்­தே­கங்கள் ஏற்­படத் தான் செய்­கின்­றன.
அதே­வேளை, புது­டில்­லியில் புதிய அர­சாங்கம் அமைந்து, இப்­போது தான், இரண்டு மாதங்கள் நிறை­வ­டைந்­துள்­ளன என்­ப­தையும் கவ­னத்தில் கொள்ள வேண்டும்.
இந்த இரண்டு மாதங்­க­ளிலும், இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியும், இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சும் இறுக்­க­மான நிகழ்ச்சி நிர­லுடன் ஓடிக் கொண்­டி­ருப்­ப­தையும் உணர வேண்டும்.
இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி, உள்­நாட்டுப் பிரச்­சி­னை­களைச் சமா­ளிப்­ப­தற்­கான உத்­தி­களை வகுக்க வேண்­டிய நிலையில் இருந்­த­துடன், இந்தக் கால இடை­வெ­ளிக்குள், இரண்டு வெளி­நாட்டுப் பய­ணங்­க­ளையும் முடித்துக் கொண்டு திரும்­பி­யி­ருக்­கிறார்.
பூட்­டா­னுக்கும், பிரே­சி­லுக்கும் அவர் பய­ணங்­களை மேற்­கொண்­டுள்­ள­துடன், நேபாளம், ஜப்பான், அமெ­ரிக்கா உள்­ளிட்ட அடுத்­த­டுத்த வெளி­நாட்டுப் பய­ணங்­க­ளையும் எதிர்­நோக்­கி­யி­ருக்­கிறார்.
அது­போ­லவே, இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், பத­வி­யேற்ற பின்னர், தொடர்ச்­சி­யான வெளி­நாட்டுப் பய­ணங்கள், சிக்­கல்கள், சந்­திப்­பு­க­ளுக்குள் சிக்­கி­யி­ருக்­கிறார் என்­ப­தையும் குறிப்­பிட்­டே­யாக வேண்டும்.
அவர், முதலில் பங்­க­ளா­தே­ஷுக்கும், பின்னர், பூட்டான், நேபாளம் ஆகிய நாடு­க­ளுக்கும் பய­ணங்­களை மேற்­கொண்­ட­துடன் அடுத்து மியான்­மா­ருக்குச் செல்­லவும் திட்­ட­மிட்­டுள்ளார்.
இதற்­கி­டையில், இலங்கை வெளி­வி­வ­கார அமைச்சர் ஜி.ல்.பீரிஸ், அமெ­ரிக்க இரா­ஜாங்கச் செயலர் ஜோன் கெரி, பிரதிச் செயலர் வில்­லியம் பேர்ன், பிரித்­தா­னிய வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக இருந்த வில்­லியம் ஹேக் மற்றும் சீனா, உகண்டா, பிரான்ஸ், சிங்­கப்பூர், ஓமான், மியான்மார், கட்டார் உள்­ளிட்ட பல நாடு­களின் வெளி­வி­கார அமைச்­சர்­க­ளையும், இந்த இரண்டு மாதங்­க­ளிலும் சுஸ்மா சுவ­ராஜை சந்­தித்­துள்­ளனர்.
இவை தவிர, ஈராக்கில் சிக்­கி­யுள்ள இந்­தி­யர்­களை மீட்கும் விவ­காரம், உள்­ளிட்ட சிக்­கல்­க­ளையும் சந்­திக்க நேரிட்­டது.
ஆக, புது­டில்­லியில் அமைந்த புதிய அர­சாங்கம், இந்த இரண்டு மாதங்­க­ளிலும், தன்னைச் சுற்றி நடக்கும் தீவி­ர­மான விவ­கா­ரங்கள் குறித்தே கவனம் செலுத்த வேண்­டிய நிலை இருந்­தது என்­பதை மறுக்க முடி­யாது.
இந்தச் சிக்­க­லுக்குள், தமி­ழர்­களின் பிரச்­சினை குறித்து ஆலோ­சிக்­கவோ, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு அழைப்பு விடுப்­ப­தற்கோ, புதிய அர­சுக்கு நேரம் கிடைத்­தி­ருக்கும் என்று கருத முடி­ய­வில்லை.
அதை­விட, இந்­தியா மட்­டு­மல்ல, எந்­த­வொரு நாடுமே, தமது தேவைகள், நலன்­க­ளுக்கே முக்­கி­யத்­து­வமும் முன்­னு­ரி­மையும் கொடுக்கும்.
இப்­போ­தைய நிலையில், இலங்கை அர­சாங்­கத்­துடன் உறவைப் பலப்­ப­டுத்திக் கொள்­வதன் மூலம் அடையக் கூடிய நன்­மையை விட, தமிழர் தரப்­புடன் உறவைப் பலப்­ப­டுத்திக் கொள்­வதன் மூலம், கூடுதல் நலன்­களை இந்­தி­யா­வினால் பெற்று விட முடியும் என்று கூற முடி­யாது.
எனவே, சந்­தர்ப்பம் வரும்­போது பின்னர் ஒரு­முறை பார்த்துக் கொள்­ளலாம் என்ற அலட்­சியம் கூட புது­டில்­லி­யிடம் இருக்­கலாம். அதற்­கான வாய்ப்­பு­க­ளையும் நிரா­க­ரிக்க முடி­யாது.
எவ்­வா­றா­யினும், தமிழர் பிரச்­சினை இலங்­கையின் உள்­நாட்டு விவ­காரம் என்று, ஒதுக்கி வைத்து விட்டு இந்­தி­யா­வினால் முழு­மை­யாக ஒதுங்கி நின்­று­விட முடி­யாது.
அதற்­காக, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு அழைப்பு விடு­வது தாம­திக்­கப்­ப­டு­கி­றது என்று கரு­தவும் முடி­யாது.
பொது­வா­கவே, இலங்­கை­யு­ட­னான உறவு விட­யத்தில், இலங்கைப் பிரச்­சினை விவ­கா­ரத்தில், புதிய அர­சாங்கம் நிதானப் போக்­கையே வெளிப்­ப­டுத்­து­கி­றது.
இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியின் முதல் வெளிநாட்டுப் பயணம் கொழும்புக்கானதாக இருக்கும் என்று முதலில் இலங்கை அரசாங்கம் நம்பியது.
ஆனால், அவர் பூட்டானுக்கும் பிரேஸிலுக்கும் சென்று வந்துவிட்டார் -அடுத்து, நேபாளத்துக்குச் செல்லப் போகிறார்.
எனினும் இலங்கைப் பயணம் பற்றிய எந்த தகவலும் இல்லை.
அதுபோலவே சுஸ்மா சுவராஜ், முதலில் இலங்கை வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பங்களாதேஷ், பூட்டான், நேபாளம் என்று சென்று வந்துவிட்ட அவர் அடுத்து மியான்மார் செல்லவுள்ள போதும், இலங்கையைக் கண்டுகொள்ளவில்லை.
நரேந்திர மோடியின் அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மட்டுமன்றி, இலங்கை அரசாங்கத்தையும் கூட சற்று எட்டி வைத்தே கண்காணிக்கிறது.
இது, இந்த விவகாரத்தில் இருந்து தான் ஒதுங்கி நிற்பதாக காட்டிக் கொள்வதற்காகவோ அல்லது சற்று ஒதுங்கி நின்று அவதானித்து விட்டு, ஒரு பெரும் பாய்ச்சலை நடத்துவதற்காகவா? – பொறுத்திருந்து பார்க்கலாம்.
 ஹரி­கரன்
http://www.tamilwin.com/show-RUmsyITXLcfu4.html

Geen opmerkingen:

Een reactie posten