தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 7 augustus 2014

ராஜீவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனையை உறுதிப்படுத்த மத்திய அரசு தீவிரம்!!

கோத்தபாயவின் மேற்பார்வையில் திட்டமிட்டு வர்த்தகத்தில் ஈடுபடும் படையினர்
[ வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2014, 10:11.20 AM GMT ]
பொருளாதாரம் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் இலங்கை படையினர் திட்டமிட்டு தனது பிடியை அதிகரித்து வருவதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
வடக்கு, கிழக்கில் காய்கறி பயிரிடுவது முதல் கொழும்பு நகர அழகுபடுத்துதல் உட்பட பல செயற்பாடுகளில் இராணுவம் ஈடுபட்டு வருகிறது.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் மேற்பார்வை மற்றும் அறிவுரையின்படி சுற்றுலாத்துறையின் ஹொட்டல் வர்த்தகத்தில் விமானப் படையினரின் பங்கு அதிகரித்துள்ளது.
முப்படைகளை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களை குறைந்த ஊதியத்தில் ஊழியர்களாக பயன்படுத்தி இந்த சுற்றுலா ஹொட்டல்களின் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அது தனியார் துறையினருக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பேசப்படுகிறது.
திருகோணமலை, சீனன்குடா, திருகோணமலை துறைமுகம், அனுராதபுரம், அத்திட்டிய, கட்டுநாயக்க போன்ற இடங்களில் விமானப் படையினர் சுற்றுலா ஹொட்டல் மற்றும் விடுதிகளை நடத்தி வருகின்றனர்.
அத்துடன் விமானப் படையினருக்கான செல்லப்பிராணிகள் சேவை நிலையத்தையும் விமானப் படையினர் நடத்தி வருகின்றனர்.
விமானப் படையினரை தவிர இராணுவத்தினரும் சுற்றுலா ஹொட்டல்களை நடத்தி வருகின்றனர்.
சுற்றுலா ஹொட்டல் மற்றும் விடுதிகளை தவிர, விமானப் படையினர் கொழும்பு பொரள்ளை பிரதேசத்தில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் உள்ளூர் வர்த்தகத்தில் படையினர் ஈடுபட்டு வருவதால், அதே துறைகளில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நபர்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyITbLdnt6.html
ராஜீவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனையை உறுதிப்படுத்த மத்திய அரசு தீவிரம்
[ வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2014, 10:25.44 AM GMT ]
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991–ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வந்தபோது மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு தூக்குத் தண்டனையும் 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. பிறகு நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் தங்கள் தண்டனையை குறைக்கும்படி ஜனாதிபதியிடம் கருணை மனு கொடுத்தனர். அந்த கருணை மனு மீது 11 ஆண்டுகளாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து இந்த கால தாமதத்தை காரணம் காட்டி குற்றம் சுமத்தப்பட்ட 3 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தனர்.
அந்த மனுவை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பு வழங்கியபோது, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது.
அதோடு அவர்களை விடுவிப்பது பற்றி மாநில அரசு முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்தது. இதனால் ராஜீவ் கொலை குற்றவாளிகள் அனைவரும் விடுதலை ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் அப்போதைய காங்கிரஸ் அரசு சுப்ரீம் கோர்ட்டில் அவசரம், அவசரமாக மனு செய்து, ராஜீவ் கொலையாளிகள் விடுதலை செய்யப்படுவதற்கு இடைக்கால தடை பெற்றது. இது தொடர்பாக மத்திய அரசு விரிவான பதில் தர சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதற்கிடையே கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிதாக பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ராஜீவ் கொலையாளிகள் விஷயத்தில் என்ன கொள்கை முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும் ராஜீவ் கொலை கைதிகளுக்கு தூக்கு தண்டனை பெற்று கொடுக்க தீவிரமாக இருப்பது தெரிய வந்துள்ளது. சமீபத்தில் புதிய சொலிசிட்டர் ஜெனரலாக ரஞ்சித்குமார் நியமிக்கப்பட்டார். அவர் ராஜீவ் கொலை குற்றவாளிகளை தூக்கில் போடலாம் என்று கருத்து தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்தே முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரையும் தூக்கில் போட பரிந்துரை செய்து மனு தயாரித்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யும்படி சட்ட அமைச்சகத்திடம் உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த 3 பேரையும் தூக்கில் போடுவதை உறுதி செய்யும் வகையில் தனிப்பட்ட சிறப்பு மனுவாக அந்த மனுவை தயாரித்து அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பா.ஜ.க. அரசின் இந்த முடிவு தமிழ் ஆர்வலர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITbLdnt7.html

Geen opmerkingen:

Een reactie posten