ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள இலங்கைமீதான சர்வதேச விசாரணை ஆராய்வு
இது குறித்து மேலும் தெரியவருவதாவது:
சர்வதேச விசாரணை குழுவினர் தற்போது ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்கு முறைப்பாடுகளை ஆராய்வதிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்த மாத இறுதிக்குள் முறைப்படியான விசாரணைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் குற்றச்சாட்டுகளை வகைப்படுத்துவதே இதன் நோக்கம். மேலும் தங்களிடம் உள்ள தகவல்கள் தொடர்பாக ஸ்கைப் மூலமாக இலங்கையில் உள்ள சிலரிடம் விசாரணைக்குழுவினர் தொடர்பு கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
http://www.jvpnews.com/srilanka/78332.html
மகிந்தரின் சர்வதேச விசாரணைக் குழு விலகும் ஆபத்து
இது அழகுராணி போட்டி அல்ல. சர்வதேச விசாரணைக் குழுவுடன் மோதுவதற்காகவே தாங்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருக்கிறோம் என தெரிந்தால் அந்த மூவரும் விலகி விடுவார்கள்.
இந்த ஆணைக் குழுவின் உண்மையான நோக்கம் என்ன? உண்மையை கண்டுபிடித்து நல்லிணக்கத்தை உருவாக்குவது. அவர்களுக்கு வேறு அரசியல் நோக்கம் கிடையாது. அவர்கள் சர்வதேச ரீதியாக உயர் தராதரத்தை பேணும் நிபுனர்கள். சர்வதேச கொள்கைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களுக்கு ஏற்ப பணியாற்றுபவர்கள். அவர்கள் இலங்கை அரசாங்கத்திற்கோ அல்லது புலம்பெயர்ந்த தமிழர்களுக்கோ நன்மை கிடைக்க வேண்டும் என்பதற்காக பணியாற்றவில்லை. அவர்கள் சுயாதீனமாக பணியாற்றுவார்கள். ஆகவே ஒரு போட்டி இருக்க முடியாது. அரசாங்கம் இதனை ஒரு போட்டியாக மாற்ற முயன்றால் எப்படியும் நாங்களே தோல்வி அடைவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/78335.html
Geen opmerkingen:
Een reactie posten