தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 5 augustus 2014

தலாய் லாமா இலங்கை பௌத்தர்களுக்காக குரல் கொடுக்கத் தவறியவர்!– ஒமல்பே சோபித தேரர்

பிரித்தானியா தேர்தல் நடைபெற 9 மாதம் இருக்க துணைபிரதமரின் அதிரடி அறிவிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 05 ஓகஸ்ட் 2014, 07:18.59 AM GMT ]
ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் குடிமக்கள் ஏழு வருடங்களின் பின் அந்த அமைப்பின் உறுப்பு நாடுகளில் எங்கு வேண்டுமானாலும் சென்று குடியேறி, தொழில் செய்யலாம் என பிரித்தானியா அறிவித்துள்ளது.
பிரித்தானிய பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஒன்பது மாதங்கள் இருக்கின்றன.
இந்த நிலையில் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கான குடியேற்றம் குறித்த முக்கியமான விவாதம் ஒன்று நேற்று இடம்பெற்றது.
இந்த விவாதத்தில் பங்குபற்றிய போதே மேற் கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஏழு வருடங்கள் குடியிருந்த ஒருவர்,  ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளில் எங்கு வேண்டுமானாலும் சென்று குடியேறவோ அல்லது தொழில் புரியவோ முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர் கூட்டனி அரசில் அங்கம் வசிக்கும் லிபரல் ஜனநாயகம் என்ற கட்சியின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலாய் லாமா இலங்கை பௌத்தர்களுக்காக குரல் கொடுக்கத் தவறியவர்!– ஒமல்பே சோபித தேரர்
[ செவ்வாய்க்கிழமை, 05 ஓகஸ்ட் 2014, 07:12.07 AM GMT ]
திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா இலங்கை பௌத்தர்களுக்காக குரல் கொடுக்கத் தவறியுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் வலமிட்டியாவ பிரதேசத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சங்கத்தின் 21ம் ஆண்டு நிறைவு நிகழ்வுகளில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் முஸ்லிம்கள் மீது பௌத்தர்கள் தாக்குதல் நடத்துவதாக அண்மையில் தலாய் லமா தெரிவித்திருந்தார். இந்த தகவல் முற்றிலும் அடிப்படையற்றது.
புலிப் பயங்கரவாதிகள் தலதா மாளிகை மீது குண்டு வீசிய போது, அரந்தலாவையில் பௌத்த பிக்குகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட போது, ஸ்ரீ மஹா போதி மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது தலாய் லாமா எதனையும் குறிப்பிடவில்லை.
குறைந்தபட்சம் புத்தகயா மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது கூட தலாய் லாமா எதனையும் குறிப்பிடவில்லை.
உலக பௌத்த தலைவராக கருதப்படும் தலாய் லாமாவின் நடவடிக்கைகள் குறித்து வருத்தமடைகின்றோம்.
எமது நாட்டுக்கு எதிராக உலகின் பல நாடுகளினால் சூழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கை போதைப் பொருள் விநியோக மத்திய நிலையமாக மாற்றமடைந்து செல்கின்றது.
போதைப் பொருள் கொள்கலன் கணக்கில் பிடிக்கப்பட்டாலும் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவதில்லை என ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITZLcet6.html

Geen opmerkingen:

Een reactie posten