[ செவ்வாய்க்கிழமை, 02 டிசெம்பர் 2014, 03:54.58 PM GMT ] [ பி.பி.சி ]
இன்று கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
தான் பதவிக்கு வந்த பின்பு நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்படுமா என்று பலர் கேள்விகளை எழுப்பி வருவது குறித்து குறிப்பிட்ட அவர்,
நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன். நான் தேர்தலில் வெற்றி பெற்றால் ஜனாதிபதின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குக் கூட செல்லமாட்டேன்.
அது மட்டுமல்ல பதவியேற்று நூறு நாட்களுக்குள் ஜனாதிபதி பதவி ஒழிக்கப்பட்டு அனைத்துக் கட்சிகள் கொண்ட அரசாங்கமொன்று உருவாக்கப்படும் என்று கூறினார் மைத்திரிபால சிறிசேன.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பேசும்போது,
மக்களின் ஜனநாயக உரிமைகளையும் அரசியல் கட்சிகளையும் முடக்குவதற்காகவே மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி ராஜபக்ச மக்கள் முன்வந்துள்ளதாகவும், இந்த முயற்சிகளை தோற்கடிக்க மக்கள் முன்வரவேண்டுமென்றும் தெரிவித்தார்.
நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வரும் ஜனநாயகக் கோட்பாடுகளை அழித்து தனது குடும்ப ஆட்சியொன்றை உறுதிபடுத்துவதற்காகவே ஜனாதிபதி ராஜபக்ச முன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக முயல்கிறார் என்றும் குற்றம் சாட்டினார் ரணில் விக்கிரமசிங்க.
ஜனநாயக கட்சியின் தலைவர் மனோ கணேசன் பேசுகையில்,
தற்போது சிவில் நிர்வாகம் முழுமையாக இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது மாறி இயல்பு நிலை திரும்பவேண்டுமென்று எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களுக்கு வாக்குறுதி தரவேண்டுமென்று கோரினார்.
http://www.tamilwin.com/show-RUmszCTWKZkt4.html
புலிகளின் புதைகுழி என்று கூறப்பட்ட ஒட்டுசுட்டான் காட்டுப் பகுதியில் ஆய்வு நடவடிக்கை!
[ செவ்வாய்க்கிழமை, 02 டிசெம்பர் 2014, 03:34.24 PM GMT ]
கடந்த 2006ம் ஆண்டு கொழும்பு கல்கிசை பொலிஸ் நிலையத்தில் அத்தியட்சகர் ஜயரட்ணம் மற்றும் இராணுவத்தின் கப்டன் தரத்திலான அதிகாரி ஒருவர் உட்பட 80 பேர் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள சமணங்குளம் காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளினால் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டதாக, பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் விசாரணையில் முன்னாள் போராளிகள் 4பேர் சாட்சியம் வழங்கியிருக்கின்றனர்.
குறித்த வழக்கு தற்போது கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் கடந்த 19ம், 20ம் திகதிகளில் நீதவான் நீதிமன்றம் நடத்திய விசாரணையின் பின்னர், குறித்த பகுதியை மேலதிக ஆய்விற்குட்படுத்துமாறு நீதிமன்றம் பணித்திருந்தது.
இதற்கமைய குறித்த பகுதியை இன்றைய தினம் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருடன் இணைந்து 9 அமைப்புக்களை சேர்ந்த 25பேர் ஆய்வு செய்துள்ளனர்.
இதற்காக கொழும்பு மற்றும் வடமாகாணத்திலிருந்து ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் காலை 9 மணி தொடக்கம் மாலை 3மணி வரையில் மேற்படி ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது முன்னாள் போராளிகள் அடையாளப்படுத்திய பகுதியில் உள்ள மண்ணில் டீசல் கலந்திருப்பதும், அந்த இடத்தில் எரியூட்டப்பட்டதற்கான சான்றுகள் மற்றும், மண் மாதிரிகள்,
ஆகியவற்றை தாம் மீட்டிருப்பதாக ஆய்வு நடத்தியவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆகியவற்றை தாம் மீட்டிருப்பதாக ஆய்வு நடத்தியவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மீட்கப்பட்ட மாதிரிகள் மேலதிக ஆய்விற்குட்படுத்தப்பட்டே முடிவு அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் குறித்த ஆய்வு தொடர்ந்து 5 தினங்களுக்கு நடத்தப்படவுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCTWKZkt3.html
Geen opmerkingen:
Een reactie posten