தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 2 december 2014

80 பேரை புலிகள் கொன்று புதைத்தார்களாம்: முல்லைத்தீவில் புதைகுழி உள்ளதாக தோண்டப்படுகிறது !

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் புலிகள் முல்லைத்தீவில் உள்ள ஒரு இடத்தில், 80 பேரைப் புதைத்தார்கள் என்று கூறி அவ்விடத்தை தோண்ட புலனாய்வுத்துறையினர் எத்தணிப்பதாக அதிர்வு இணையம் அறிகிறது. முன்னாள் புலிகள் உறுப்பினர் கொடுத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் தான், தாம் தோண்டவுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள். இராணுவ அதிகாரி, பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரி மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 80 பேர் கொலை செய்யப்பட்டு இந்த இடத்தில் புதைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் போராளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் புதைகுழி தோண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இந்த பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பணியில் அரச இரசாயன பகுப்பாய்வு பிரிவினர், தொல்பொருள் ஆய்வாளர்கள், காணி அளவையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஈடுபட்டுள்ளதாக கூறும் அரசாங்கம், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
http://www.athirvu.com/newsdetail/1560.html

Geen opmerkingen:

Een reactie posten