தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 26 december 2014

13வது திருத்தம் தொடர்பில் மைத்திரியின் நிலைப்பாடு என்ன?- வெளியிட கோருகிறார் வீரவன்ச



பிரதமர் மோடியின் செயற்பாடுகள் இலங்கைத் தமிழர்களின் நிரந்தர தீர்வுக்கானவை!- பொன்.ராதாகிருஸ்ணன்
[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 02:27.36 AM GMT ]
பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற தருணத்தில் இலங்கை அதிபரை சந்தித்த முதல் சந்திப்பிலேயே தமிழர்களின் நலன் குறித்து பேசியதோடு, தமிழர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற சிந்தனையில் செயற்படத் தொடங்கியுள்ளதாகவும், பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை எட்ட உதவுவார் என்றும்  அமைச்சர் பொன். ராதாகிருஸ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு ஓர் சர்வதேச சுயாதீன விசாரணை மூலம் நியாயம் வழங்கப்பட வேண்டுமென பிரித்தானிய தமிழ்ர் பேரவை பல்வேறு தளங்களில் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றது.
அதன் ஒரு அங்கமாக இந்திய அரசின் அமைச்சர்களையும் பாரதீய ஜனதா கட்சியின் பிரமுகர்களையும் அண்மையில் பிரித்தானிய தமிழர் பேரவையின் பிரமுகர்கள் டெல்லியில் சந்தித்தார்கள்.
அந்த சந்திப்பின் போது இந்திய அமைச்சர் பொன். ராதாகிருஸ்ணன் அவர்கள் பகிர்ந்து கொண்ட கருத்துக்களை இந்த காணொலியில் காணலாம்.
http://www.tamilwin.com/show-RUmszCRaKahxy.html
போர்க்குற்ற விசாரணைகள் குறித்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை: அரசாங்கம்
[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 03:10.19 AM GMT ]
போர்க்குற்றச் செயல் விசாரணகள் குறித்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
சர்வதேச ரீதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நடத்தப்பட்டு வரும் போர்க் குற்றச் செயல் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கையிடம் அண்மையில் கோரியிருந்தார்.
சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை ஆதரவளிக்க வேண்டியது அவசியமானது என அவர் மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.
எனினும் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது.
உள்நாட்டு ரீதியில் விசாரணை நடத்தப்பட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் எனவும் சர்வதேச விசாரணைகளுக்கு இடமில்லை எனவும் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 2015ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் திகதி இலங்கை தொடர்பான சர்வதேச நிபுணர் குழுவின் அறிக்கை மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் சமர்ப்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்கத்கது.
விசாரணைகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவர் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் அறிவித்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRaKahxz.html
13வது திருத்தம் தொடர்பில் மைத்திரியின் நிலைப்பாடு என்ன?- வெளியிட கோருகிறார் வீரவன்ச
[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 03:44.47 AM GMT ]
ரணில் - மைத்­திரி ஒப்­பந்தம் போலி­யா­னது எனில் பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சி­ய­ல­மைப்பின் 13 வது திருத்த சட்டம் தொடர்­பி­லான தனது உண்­மை­யான நிலைப்­பாட்டை நாட்­டிற்கு வெளி­யிட வேண்டும் என  தேசிய சுதந்­திர முன்­னணி தலை­வரும் அமைச்­ச­ரு­மான விமல் வீர­வன்ச சவால்­ வி­டுத்துள்ளார்.
மேலும் வடக்­கி­லி­ருந்து இரா­ணுவம் வெளி­யேற்­றப்­ப­டுமா? இல்லையா? 13வது திருத்­தத்தில் உள்­ள­டங்­காத எல்லை மீறிய அதி­காரம் கொண்டு வரப்­ப­டுமா? இல்­லையா? என்­ப­தற்­கான பதி­லையும் உட­ன­டி­யாக வெளி­யிட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தநிலையில், ரணில் – மைத்­திரி ஒப்­பந்தம் உண்­மை­யாகும் வகையில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு பொது வேட்­பா­ள­ருக்கே விரைவில் ஆத­ரவு வழங்கும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.
கொழும்­பி­லுள்ள ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தலை­மை­ய­கத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் அங்கு மேலும் கருத்து தெரி­விக்­கையில்;
ரணில் – மைத்­தி­ரிக்­கு­மி­டையில் கைச்­சாத்­தி­டப்­பட்­ட­தாக அமைச்சர் திஸ்ஸ அத்­த­நா­யக்­க­வினால் வெளி­யி­டப்­பட்ட ஒப்­பந்தம் போலி­யா­னது என கூறு­கின்­றனர். எனினும் இந்த ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்ள எதிர்க்­கட்சி தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் கையொப்பம் உண்­மை­யா­னதா என்­ப­தனை பொலி­ஸாரே தீர்­மா­னிப்பர்.
குறித்த ஒப்­பந்தம் போலி­யா­னது எனில் அந்த ஒப்­பந்­தத்தில் உள்­ள­டக்­கப்­பட்ட கூற்­றுக்­களை நிறை­வேற்­று­வதா? இல்­லையா? என்­ப­தனை பொது வேட்­பா­ளரோ அல்­லது வேறு எவ­ருமோ நாட்­டுக்கு கூற­வில்லை. மேற்­கு­றித்த கேள்­வி­யி­லி­ருந்து தப்­பித்து கொள்­ளவே எதி­ர­ணி­யினர் முயற்சி செய்­கின்­றனர்.
எனவே வடக்­கி­லி­ருந்து இரா­ணுவம் குறைக்­கப்­ப­டுமா? இல்­லையா? அதி பாது­காப்பு வல­யத்தில் மீள் குடி­யேற்றம் செய்­யப்­ப­டுமா? இல்­லையா? அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்த சட்டம் பலப்­ப­டுத்­தப்­ப­டுமா? இல்­லையா? என்ற கேள்­வி­க­ளுக்கு எவரும் பதில் கூறு­வ­தாக தெரி­ய­வில்லை.
பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் நாட்டின் தேசிய பாது­காப்பு ஐக்­கியம் அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்த சட்டம் தொடர்பில் எந்­த­வொரு நிலைப்­பாட்­டி­னையும் கூற­வில்லை.
இதற்கு பதி­லாக இர­க­சிய ஒப்­பந்­தத்தின் ஊடாக அவற்­றினை உள்­ள­டக்­கி­யுள்­ளனர். இந்த ஒப்­பந்­தத்­தினை வெளி­யிட்டால் பெரும்­பான்­மை­யி­னரின் வாக்கு கிடைக்கப் பெறாமல் போய்­விடும் என்ற அச்­சமே அதன் கார­ண­மாகும்.
எனவே தமிழ் வாக்­கு­களை மைய­மாக கொண்டு இந்த இர­க­சிய ஒப்­பந்தம் செய்­யப்­பட்­டுள்­ளது. ஆகவே இது தொடர்­பி­லான உண்­மை­யான ஒப்­பந்தம் வெளி­யி­டப்­பட வேண்டும். எவ்­வா­றா­யினும் ஒப்­பந்­தத்­திற்கு அமை­வாக தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு விரைவில் பொது வேட்­பாளர் சிறி­சே­ன­விற்கு ஆத­ரவு அளிக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை.
எதி­ர­ணியின் பொது வேட்­பா­ள­ருக்கு சவால் விடுக்­கிறோம். ரணில் - மைத்­திரி ஒப்­பந்தம் போலி­யா­னது எனில் அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்த சட்டம் தொடர்பில் பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது நிலைப்­பாட்­டினை உட­ன­டி­யாக வெளி­யிட வேண்டும்.
மேலும் வடக்­கி­லி­ருந்து இரா­ணுவம் வெளி­யேற்­றப்­ப­டுமா? அர­சி­ய­ல­மைப்பின் 13வது திருத்தச் சட்­டத்தில் இல்­லாத எல்லை மீறிய அதி­காரம் கொண்டு வரப்­ப­டுமா ? என்­பது தொடர்­பி­லான தனது நிலைப்­பாட்டை மைத்­தி­ரி­பால சிறி­சேன தெளி­வு­ப­டுத்த வேண்டும்.
எனவே எதி­ர­ணியின் செயற்­பா­டுகள் அனைத்தும் வாக்­கு­களை இலக்கு வைத்து மக்­க­ளது கண்­களில் மண்ணை தூவும் செய­லாகும்.
இதே­வேளை பொது வேட்­பா­ளரின் கொள்கை பிர­க­ட­னத்­திற்கு அமைய கருத்து கணிப்பு நடத்­தப்­பட போவ­தில்லை என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அவ்­வா­றாயின் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை பொது வேட்­பாளர் நீக்க போவ­தில்லை. ஜனா­தி­பதி முறைமை நீக்­கு­வ­தாயின் நாட்டில் கருத்து கணிப்பு நடத்­தப்­பட வேண்டும்.
http://www.tamilwin.com/show-RUmszCRaKahx2.html

Geen opmerkingen:

Een reactie posten