தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 25 december 2014

பயமுறுத்தலை மீறி தமிழ் மக்கள் மாற்றத்தை வேண்டி வாக்களிப்பார்கள்!- மனோ கணேசன்

ஜனா­தி­பதி மஹிந்­தவின் தேர்தல் விஞ்­ஞா­பன உறு­தி­மொ­ழிகள் நடைமுறைப்படுத்தப்படுமா?
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 09:15.00 AM GMT ]
மக்­களின் எண்­ணங்­களை பிர­தி­ப­லிக்­கின்ற புதிய அர­சியல் அமைப்­பொன்றை ஒரு வரு­ட­கா­லத்­திற்குள் நிறை­வேற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்பேன். இதற்­காக அனைத்து அர­சியல் கட்­சி­க­ளு­டைய மக்கள் பிர­தி­நி­தி­களைக் கொண்ட முழு பாரா­ளு­மன்­றத்­தையும் சட்­ட­வாக்கப் பேர­வை­யாக மாற்­றுவேன் என்று ஜனா­தி­பதி மஹிந்­த­ ரா­ஜ­பக்ச தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் உறு­தி­ய­ளித்­துள்ளார்.
மஹிந்­த­ சிந்­தனை உலகை வெல்லும் வழி என்ற ஜனா­தி­பதி மஹிந்­த ரா­ஜ­பக்சவின் தேர்தல் விஞ்­ஞா­பனம் நேற்று முன்­தினம் கொழும்பு பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் வெளியி­டப்­பட்­டது. மதத்­த­லை­வர்கள், அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் விஞ்­ஞா­ப­னத்தை ஜனா­தி­பதி மஹிந்­த ரா­ஜ­பக்ச வெளியிட்டு வைத்தார்.
பாரா­ளு­மன்ற முறை­யி­லுள்ள பல­வீ­னத்தைக் கருத்தில் கொண்டு சட்­ட­வாக்கப் பேர­வையின் தீர்­மா­னத்­திற்கு அமைய நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறையை திருத்தம் செய்­வ­தற்கு நட­வ­டிக்­கையை எடுப்பேன்.
பிர­தேச பிர­தி­நி­தித்­துவ மற்றும் தொகுதி முறையைக் கொண்ட கலப்பு தேர்தல் முறைக்கு செல்வேன்.
பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கைகள் கார­ண­மாக சந்­தே­கத்தின் பேரில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள, தற்­போது வழக்கு தொட­ரப்­ப­டா­துள்ள அனைத்து வடக்கு இளைஞர், யுவ­திகள் தொடர்பில் ஆராய்ந்து உட­னடி நட­வ­டிக்கை எடுப்­ப­தற்­காக ஓய்வு பெற்ற நீதி­பதி தலை­மையில் அனைத்து அதி­கா­ரங்­க­ளுடன் குழு­வொன்று நிய­மிக்­கப்­படும்.
வடக்கில் மனி­தா­பி­மான நட­வ­டிக்­கை­களின் போது மக்கள் விட்டுச் சென்ற வாக­னங்கள், தங்க ஆப­ர­ணங்கள்,  உறு­திப்­ப­டுத்­தலின் பின்னர் மீண்டும் மக்­க­ளுக்கு வழங்கும் செயற்­பாடு இவ்­வரு­டத்­திற்குள் முடி­வ­டையும். பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் காணப்­பட்­ட­ போது பாது­காப்புப் படை­க­ளினால் பயன்­பாட்­டுக்குப் பெறப்­பட்ட காணிகள், கட்­ட­டங்கள், மனி­தா­பி­மான நட­வ­டிக்­கை­களின் பின்னர் மீள வழங்­கப்­பட்டு வரு­கின்­றன.
தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் இல்­லாத வகையில் குறிப்­பிட்­ட ­கா­லத்­திற்குள் இந்த செயற்­பாடு முடி­வுக்குக் கொண்­டு­ வ­ரப்­படும். பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கையின் கார­ண­மாக அபி­வி­ருத்­தியில் பங்­கெ­டுக்­கா­தி­ருந்த வடக்கு, கிழக்கு இளைஞர், யுவ­தி­களை தேசிய அபி­வி­ருத்­தியில் பங்­கெ­டுப்­ப­தற்­காக நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் விரை­வு­ப­டுத்­தப்­படும். இவை வரை­ய­றுக்­கப்­பட்ட காலப்­ப­கு­திக்குள் முன்­னெ­டுக்­கப்­படும்.
மலை­யக மக்­க­ளுக்கு தோட்­டப்­ப­கு­தியில் 7 பேர்ச் காணியில் தனி வீடுகள் அமைத்­துக்­ கொ­டுக்­கப்­படும். எனவும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனா­தி­பதி மஹிந்­த­ ரா­ஜ­பக்ச முன்­வைத்­துள்ள தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­தில்,மைத்திரிபாலவைப் போலவே  இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு தொடர்பில் நேர­டி­யாக குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.
இருந்­த­ போ­திலும், ஒரு வரு­டத்­திற்குள் அர­சியல் அமைப்பை மாற்றி அமைத்து புதிய அர­சியல் அமைப்பை ஏற்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுப்பேன் என்றும் இதற்­காக பாரா­ளு­மன்­றத்தை சட்­ட­வாக்கப் பேர­வை­யாக மாற்­றுவேன் என்றும் ஜனா­தி­பதி குறிப்­பிட்­டுள்ளார்.
தற்­போ­தைய நிலையில் அர­சாங்­க­மா­னது இனப்­பி­ரச்­சினை தீர்வு தொடர்பில் முன்­னேற்­ற­க­ர­மான நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை.
2009 ம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடி­வுக்கு கொண்­டு ­வ­ரப்­பட்­டி­ருந்­தது. யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­ வ­ரப்­பட்டு ஐந்­தரை வருடங்கள் ஆகி­விட்­ட­போ­திலும் யுத்­தத்­திற்கு கார­ண­மான இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்­கான உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை.
2011 ஆம் ஆண்டு அர­சாங்கம் தமிழ் தேசி­யக் ­கூட்­ட­மைப்­புடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்­தது. 2012 ம் ஆண்டு ஜன­வரி மாதம் வரை 16 சுற்றுப் பேச்­சுக்கள் இடம் பெற்­றி­ருந்த போதிலும் தீர்வு எதுவும் எட்­டப்­ப­ட­வில்லை.
இந்த நிலையில் பேச்­சு­ வார்த்­தை­யி­லி­ருந்து வில­கிக்­கொண்ட அர­சாங்கம் பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழு­விற்கு வந்தால் மட்­டுமே தீர்வு குறித்து பேச முடியும் என்று அறி­வித்து விட்­டது. இதனால் பேச்­சுக்கள் தடைப்­பட்­டன.
அர­சாங்­கமும் தமிழ் தேசி­யக் ­கூட்­ட­மைப்பும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்தி வந்­தன. இந்த நிலை­யி­லேயே ஜனா­தி­பதி தேர்தல் அறி­விப்பு வெளியி­டப்­பட்­டது.
தற்­போது பாரா­ளு­மன்­றத்தை சட்­ட­வாக்­கப்­ பே­ர­வை­யாக மாற்றி புதிய அர­சியல் அமைப்பை உரு­வாக்­கு­வ­தற்கு ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி முன்­வந்­துள்­ளது.
இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வை உள்­ள­டக்கி புதிய அர­சியல் அமைப்பை உரு­வாக்­கு­வ­தற்கு எதிர்­கா­லத்தில் முயற்சி எடுக்­கப்­படும் என்­பதை அர­சாங்கம் தற்­போதும் மறை­மு­க­மாக சொல்லி இருக்­கின்­றது.
இது உண்­மை­யி­லேயே வர­வேற்­கத்­தக்க செயற்­பா­டே­யாகும்.
இது­வரை காலமும் பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழு­விற்கு வந்தால் மட்­டுமே பேச்சு என்று கூறி­ வந்த ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்கத் தரப்பு தற்­போது மாற்­று­வ­ழியில் தீர்வைக் காண்­ப­தற்கு முன்­வந்­துள்­ள­தா­கவே தெரி­கின்­றது.
இதேபோல் தமிழ் அர­சியல் கைதி­களின் விவ­கா­ரமும் பெரும் இழு­பறி நிலை­யி­லேயே இருந்து வரு­கின்­றது. தம்மை விடு­தலை செய்­யு­மாறு தமிழ் அர­சியல் கைதிகள் பல வரு­டங்­க­ளாக கோரி­ வ­ரு­கின்­ற­போ­திலும் அதற்­கான சாதகமான நிலை இன்னமும் ஏற்படவில்லை.
இறுதி யுத்தத்தின் போது பெருமளவு நகைகள், படைத்தரப்பினரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அந்த நகைகளும் முழுமையாக பொதுமக்களிடம் வழங்கப்படவில்லை.
இந்த விடயங்களுக்கும் தீர்வு காணப்படும் என ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதி வழங்கப்பட்டிருக்கின்றது.
இதனைவிட வடக்கில் பாதுகாப்பு படையினரால் சுவீகரிக்கப்பட்ட காணி மற்றும் கட்டடங்கள் என்பவை குறித்தும் மலையக மக்களுக்கு 7 பேர்ச்சஸ் காணியில் வீடு அமைக்கப்படும் என்றும் உறுதி வழங்கப்பட்டிருக்கின்றது.
ஜனா­தி­ப­தி­யினால் வெளி­யி­டப்­பட்ட தேர்தல் விஞ்­ஞா­பன அறி­விப்­புக்கள் உரிய வகையில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டால் அது மக்­க­ளுக்கு பய­னுள்­ள­தா­கவே அமையும். ஆனால் அதற்­கான சூழ்­நிலை ஏற்­ப­டுமா? என்­ப­தையும் அவை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படுமா என்­ப­தையும் பொறுத்­தி­ருந்­துதான் பார்க்கவேண்டியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRZKaht7.html
பயமுறுத்தலை மீறி தமிழ் மக்கள் மாற்றத்தை வேண்டி வாக்களிப்பார்கள்!- மனோ கணேசன்
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 09:19.24 AM GMT ]
கண்டி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, கேகாலை மாவட்டங்களின் சில இடங்களில் தமிழ் மக்களை பயமுறுத்தி வாக்களிப்பில் இருந்து அவர்களை தடுக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. தமிழர்களின் வாக்கு தனக்கு எதிராகவே விழும் என்பதை மகிந்த ராஜபக்ச நன்கு அறிந்துள்ளார்.
பயமுறுத்தல், பகிஷ்காரம் என்ற இரண்டு வழிகளை பயன்படுத்தி, அரசாங்கம் வடக்கில் தமிழ் வாக்காளர்களை வாக்களிப்பிலிருந்து ஒதுக்கி வைப்பதற்கான இரகசிய திட்டங்களை தீட்டி வருகிறது. இந்த ஜனநாயக விரோத முயற்சிகளுக்கு எதிரான மாற்று திட்டங்களை நாம் முன்னெடுப்போம்.
இத்தேர்தல் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரை முடிவு எடுக்காவிட்டாலும் கூட, அனைவரையும் கட்டாயம் வாக்களிப்பில் கலந்து கொள்ள அழைப்பு விதித்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது.
பயமுறுத்தலையும், பகிஷ்கார கோரிக்கையும் மீறி தமிழ் மக்கள் மாற்றத்தை வேண்டி வாக்களிப்பார்கள் என்று நான் நம்புகின்றேன். இது என் கோரிக்கையல்ல. தமிழ் மக்களின் மனசாட்சியை அறிந்துள்ள எனது நம்பிக்கை என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பகிஷ்கரிப்பு கோரிக்கையை நான் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கூட, அக்கட்சியின் தொடர்சியான தமிழ் தேசிய நிலைப்பாட்டை நான் புரிந்து கொள்கிறேன். இதற்கும் மகிந்த அரசுக்கும் தொடர்பு இல்லை.
ஆனால், மகிந்த அரசு பகிஷ்கார கோரிக்கையையும் கூட தனக்கு சாதகமாக பயன்படுத்த திட்டமிடும் தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. தமிழர்களை பொறுத்தவரையில் இந்த அரசின் கொள்கை இரட்டை வழிமுறைகளை கொண்டது.
இது பற்றி அறிந்துள்ள நாங்கள் இதற்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அவை பற்றி உரிய வேளையில், உரிய முறையில் மக்களுக்கு அறிவிப்போம்.
ஒன்று, எதிரணிக்கு வாக்கு விழும் என்ற சாத்தியங்களை கொண்ட இடங்களில் பயமுறுத்தல் என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வாக்களிப்பில் இருந்து தமிழ் வாக்காளர்களை தடுத்து நிறுத்தும் முயற்சி திட்டமிடப்பட்டுள்ளது.
இது முஸ்லிம் மக்கள் பெருவாரியாக வாழும் இடங்களிலும் நடைமுறையாக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இத்தகைய வழிமுறையைத்தான் இவர்கள் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது கண்டி மாவட்டத்தில் நாவலப்பிட்டி தொகுதியின் பெருந்தோட்ட பகுதிகளில் நடைமுறைபடுத்தினார்கள். அதன்மூலம் எனது பாராளுமன்ற உறுப்புரிமையை பறித்தார்கள்.
அடுத்தது, தமிழ் மக்கள் மத்தியில், குறிப்பாக வடக்கில், மைத்திரிபால சிறிசேனவும், மகிந்த ராஜபக்சவும் ஒன்றுதான், மாற்றம் எதுவும் வராது, வாக்களிப்பில் பயனில்லை, இது சிங்கள நாட்டு தேர்தல், என்ற மாதிரியான சிந்தனையோட்டத்தை பரப்பிடும் இரகசிய பிரச்சாரம், சமூகதள ஊடகங்கள் மூலமாகவும், வேறு சில அடையாளம் காணப்பட்ட ஊடகங்கள் மூலமாகவும், சில தனிநபர்கள் மூலமாகவும் முன்னெடுக்கப்படுகிறது.
எதிரணிக்கு வாக்களிக்கவுள்ள தமிழ் வாக்காளர்களை வாக்களிப்பில் இருந்து தடுத்து நிறுத்த இத்தகைய இரட்டை வழி திட்டங்களை திட்டமிட்ட முறையில் அரசு முன்னெடுகின்றது.
இவை பற்றி தமிழ் வாக்காளர்கள் நாடு முழுக்க எச்சரிகையாக இருக்க வேண்டும்.
பயமுறுத்தலையும், பகிஷ்கார கோரிக்கையும் மீறி தமிழ் மக்கள் மாற்றத்தை வேண்டி வாக்களிக்க தயாராக இருக்க வேண்டும். நமது வாக்காளர்களுக்கு நாம் துணையிருப்போம்.
http://www.tamilwin.com/show-RUmszCRZKahuy.html

Geen opmerkingen:

Een reactie posten