தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 2 juni 2014

முதலமைச்சர் “CV” யின் படை முல்லைத்தீவில்

செங்கலடி இரட்டைக்கொலை ! சந்தேக நபர்கள் மூவர் பிணையில்

2013-04-07ஆம் திகதி செங்கலடி –பதுளை வீதியில் உள்ள வீட்டில் வைத்து கணவன்-மனைவி இருவர் கோரமாக கொலைசெய்யப்பட்டிருந்தனர். இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குறித்த தம்பதியரின் மகள் உட்பட நான்கு பேர் ஏறாவூர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இது தொடர்பிலான வழங்குகள் ஏறாவூர் நீதவான் நீதிமன்றில் நடத்தப்பட்டு வந்த அதேவேளை, பிணை கோரப்பட்ட வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றிலும் தொடரப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று திங்கட்கிழமை விசாரணைக்காக எடுத்துக்கொண்ட போது, இரண்டாம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி பிரியந்தியும் மூன்றாம் நான்காம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி பிரேம்நாத்தும் ஆஜராகியிருந்தனர்.
இந்த வழக்கினை மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி சந்திரமணி விஸ்வலிங்ம் விசாரணை செய்தார்.
இதன்போது இடம்பெற்ற வாதப்பிரதிவாதங்களின் பின்னர் முதலாம் எதிரி தவிர்ந்த ஏனைய மூவரையும் பிணையில் செல்ல சில நிபந்தனைகளுடன் நீதிபதி அனுமதி வழங்கியதாக சட்டத்தரணி பிரேம்நாத் தெரிவித்தார்.
இரண்டாம் எதிரி 75 ஆயிரம் ரூபா காசுப்பிணையும் 50லட்சம் ரூபா சரீரப்பிணையிலும் மூன்றாம் நான்காம் எதிரிகள் 50ஆயிரம் ரூபா காசுப்பிணையிலும் 10லட்சம் ரூபா சரீரப்பிணையிலும் செல்ல அனுமதியளித்தார்.
அத்துடன் மூவரும் வெளிநாடு செல்வதற்கான தடைகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், திங்கள் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடவேண்டும் எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.chenkaladychenkalady-01chenkalady-02chenkalady-03

http://www.jvpnews.com/srilanka/71671.html

முதலமைச்சர் “CV” யின் படை முல்லைத்தீவில்


அத்துடன் கொக்கிளாய், கொக்குத்தெடுவாய்க்குச் சென்று சிங்கள மீனவர்களது குடியேற்றங்கள் தொடர்பிலும் ஆராய்ந்தார். அத்துடன் அந்தப் பகுதியிலுள்ள தமிழ்க் குடும்பங்களைச் சந்தித்து தேவைகள், பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். வடமாகாண சபையில் அமர்வுகளின் போது உறுப்பினர்களால் முதலமைச்சருக்கு முல்லைத்தீவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றம், சட்டவிரோத மீன்பிடித் தொழில் அந்த மாவட்ட மக்களுக்கான தடை போன்ற விடயங்கள் குறித்து சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டிருந்தன. இவை குறித்து ஆராயும் நோக்கிலும் முதலமைச்சர் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது.Cm-Mullai-VisitCm-Mullai-Visit-01Cm-Mullai-Visit-02Cm-Mullai-Visit-03Cm-Mullai-Visit-04Cm-Mullai-Visit-05
http://www.jvpnews.com/srilanka/71680.html

Geen opmerkingen:

Een reactie posten