முள்ளிவாய்க்காலில் ஆயிரம் ஆயிரம் தமிழர்கள் இறக்கும்போது கூட அப்படியே இருந்த இந்த ஆளுக்கு, ஒரு 10 முஸ்லீம்கள் இறந்தால் கூட அது பெரிய விடையம் இல்லையே ! இது ஒருபுறம் இருக்க, இனி ஒரு பிரபாகரன் உருவாக நான் விடமாட்டேன் என்று புலிகள் மீது பாய ஆரம்பித்தார். இந்த நாட்டில் பிரபாகரனுக்கு ரூம் போட்டுக் கொடுத்தது போதும், இனி அவருக்கு ரூம் போட என்னிடம் ரூம் இல்லை என்று மகிந்தர் கூறியுள்ளார். சிறிய கலவரம் ஒன்றை ஊதிப் பெரிசாக்கியுள்ளது புலம்பெயர் நாட்டில் உள்ள புலிகள் ஆதரவாளர்கள் தான் என்று கூறி அவர், புலம்பெயர் தமிழர்களையும் தாக்க தவறவே இல்லை.
இப் பிரச்சனையை நவனீதம் பிள்ளை வரை சிலர் கொண்டுசென்றுள்ளதாகவும், ஐ.நா இவ்விடையம் தொடர்பாக கவனம் செலுத்தவைத்தது, புலம்பெயர் தமிழர்கள் தான் என்றும் மகிந்தர் சாடியுள்ளார். முஸ்லீம் அமைச்சர்கள் கடந்த வெள்ளியன்று மகிந்தரை சந்தித்து கலவரம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்கள். மகிந்தர் பெரும் வாக்குறுதிகளை அவர்களுக்கு அள்ளி வழங்கியுள்ளார். ஆனால் இறுதியாக அவர் கூறிய வார்த்தைகள் என்ன தெரியுமா ? நாமே உங்களை காக்க வல்லவர்கள். இந்த தருணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்போடு இணக்கத்தை ஏற்படுத்த நினைக்கவேண்டாம் என்பது தான். ஒன்றை மட்டும் முஸ்லீம் தலைவர்கள் புரிந்துகொள்ளுதல் நல்லது. அவர்களது இணக்க அரசியல் தற்போது தோல்வியையே தழுவி உள்ளது.
2009ம் ஆண்டுக்குப் பின்னர் சில தமிழர்கள் இலங்கை சென்றதும், இலங்கை அரசால் மண்டை கழுவப்பட்டது உண்மையே. இவர்கள் போன்றவர்கள் மீண்டும் புலம்பெயர் நாடுகளுக்கு வந்து இலங்கையில் நாம் ஒற்றுமையாக ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழவேண்டும் என்று கூறுவார்கள். இணக்க அரசியல் ஒன்று செய்தால் மட்டுமே இலங்கையில் ஈழத் தமிழர்கள் நிம்மதியாக வாழலாம் என்பார்கள். இதனை ஏற்கனவே செய்துவந்த முஸ்லீம்களின் இன்றைய நிலையை நீங்கள் அனைவருமே கண்கூடாக பார்த்துவிட்டீர்கள். இணக்க அரசியலில் ஒன்றாக பின்னி பிணைந்து இருந்த இந்த முஸ்லீம்களின் மீது, தற்போது சிங்களம் கட்டவிழ்த்து விட்டுள்ள காடைத்தனத்தை. இனியும் இப்படியான ஒரு அரசியல் தமிழர்களுக்கு தேவையா ?
http://www.athirvu.com/newsdetail/227.html
Geen opmerkingen:
Een reactie posten