தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 23 juni 2014

சைபர் தாக்குதலி முடங்கியது மகிந்தரின் இணையம்: முடக்கியது யார் ?

வட்டரக்க விஜித தேரருக்கு 'பலவந்தமாக சுன்னத்து' செய்யப்பட்டதா ?

[ Jun 23, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 7615 ]
இலங்கையில் கடந்த வாரம் தாக்கப்பட்ட வட்டரக்க விஜித தேரர், தாக்குதலின் போது தனக்கு சுன்னத்து எனப்படும் விருத்தசேஷனம் செய்யப்பட்டாத கூறினார் என்று அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார். மிதவாத பௌத்த அமைப்பு என்று கருதப்படும் ஜாதிக பல சேனாவின் பொதுச் செயலாளராக வட்டரக்க விஜித தேரர் செயற்படுகிறார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வட்டரக்க விஜித தேர்ரை சந்தித்து திரும்பிய அவரது சட்டத்தரணியான நாமல் அவர்கள் இந்தத் தகவலை பிபிசியிடம் கூறியுள்ளார்.
ஒரு மிதவாத பிக்குவாகப் பொதுவாகப் பார்க்கப்படும் விஜித தேரரை, முஸ்லிம்களுக்கு ஆதரவாகச் செயற்படுவதாக கடும்போக்கு பௌத்த பிக்குமார் விமர்சித்து வருகின்றார்கள். அளுத்கம பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக கடும்போக்கு பௌத்த அமைப்பின் ஆதரவாளர்களால் தாக்குதல் நடத்தப்பட்ட மறுதினம் வட்டரக்க விஜித தேரரும், தாக்குதலுக்கு உள்ளான நிலையில் தெருவில் கிடக்கக் காணப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், சில பிக்குமாரே தன்னை தாக்கியதாகக் கூறியதாக அவரது சட்டத்தரணி முன்னதாக பிபிசியிடம் கூறியிருந்தார்.
தனது தாக்குதல் தொடர்பில் விஜித தேரர் பொதுபல சேனா அமைப்பையே குற்றஞ்சாட்டுவதாக சட்டத்தரணி கூறியுள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/222.html

சைபர் தாக்குதலி முடங்கியது மகிந்தரின் இணையம்: முடக்கியது யார் ?

[ Jun 23, 2014 04:48:10 AM | வாசித்தோர் : 5730 ]
மகிந்த ராஜபக்சவின் இணையத்தளம் உள்ளிட்ட அரச தரப்பினரின் பல அதிகாரபூர்வ இணையத்தளங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி செயலிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை அளுத்கம, பேருவளைப் பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகளைத் தொடர்ந்தே, மகிந்தரின் அதிகாரபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த இணையத்தளம் சைபர் தாக்குதலால் முடக்கப்பட்டது என்பதை, அமைச்சர் பசில் ராஜபக்ச நேற்றிரவு கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும் தற்போது அது செயற்படத் தொடங்கியுள்ளதாகவும், திங்கட்கிழமை தொடக்கம், பதிவேற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்களின் மூலம்,ஜனாதிபதி, திறைசேரி, லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் ஆகியவற்றின் இணையத் தளங்கள் முடக்கப்பட்டதாகவும், அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மகிந்தரின் இணையத்தளம் தற்போது இயங்கி வருவதாக, அதிபரின் ஊடகப் பேச்சாளர் அனுராத ஹேரத் தெரிவித்துள்ளார். திறைசேரி இணையத்தளமும் இயங்கத் தொடங்கியுள்ளது.
"ஒப்பரேசன் சிறிலங்கா" என்ற பெயருடையவர்களே, மகிந்த ராஜபக்சவின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
http://www.athirvu.com/newsdetail/226.html

Geen opmerkingen:

Een reactie posten