தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 2 juni 2014

ரணிலுக்கு வெட்கமில்லை என விமர்சித்து, மரண வீடென்றும் பாராது பலமாக சிரித்த ஜனாதிபதி!!



பல்கலைக்கழக மாணவர்களைத் தாக்கிய சனத் ஜயசூரியவின் குண்டர்கள்
[ திங்கட்கிழமை, 02 யூன் 2014, 12:43.45 PM GMT ]
ருகுணு பல்கலைக்கழகத்திற்குள் பொல்லுகள், கம்பிகளுடன் நுழைந்த நாடாளுமன்ற உறுப்பினர் சனத் ஜயசூரியவின் குண்டர்கள் சுமார் 200 பேர், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர்.
இதனால் பல்கலைக்கழத்தில் இன்று மதியம் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான சனத் ஜயசூரியவின் ஆதரவாளர்கள், பல்கலைக்கழகத்திற்கு எதிரில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கும்போது, வெளியில் வந்த பல்கலைக்கழக மாணவர்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கியுள்ளனர். ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மத்தியில் சனத் ஜயசூரிய உரையாற்றியிருந்தார்.
தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை பல்கலைக்கழகத்தில் நடத்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அரசாங்கம் அதனை கைவிட்டது.
இந்த நிலையில், இன்று மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த சென்ற குழுவினர் இந்த காரணத்தை கூறியே மாணவர்களை தாக்க முயற்சித்துள்ளனர்.
எவ்வாறாயினும், மாத்தறை பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தாக்குதல் நடத்த சென்றவர்களை அங்கிருந்த வெளியேற்றியுள்ளனர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த மூன்று மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பல்கலைக்கழக வளாகத்தில் அமைதி நிலவுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGTWLZgwz.html
ரணிலுக்கு வெட்கமில்லை என விமர்சித்து, மரண வீடென்றும் பாராது பலமாக சிரித்த ஜனாதிபதி
[ திங்கட்கிழமை, 02 யூன் 2014, 02:21.33 PM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தற்போது தனக்கு எதிராக சேறுபூசி வருவதாகவும் எவ்வித வெட்கமும் இன்றி, தன்னிடம் இரண்டு பாதுகாப்பு ஜீப் வண்டிகளையும் 10 இளம் பொலிஸாரையும் கேட்டதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் இளைய சகோதரர் சாலிய திஸாநாயக்கவிற்கு அஞ்சலி செலுத்த சென்றிருந்தபோது, அங்கு கூடியிருந்த அமைச்சர்களிடம் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
உண்மையில் ரணிலுக்கு வெட்கமில்லை. என்னை விமர்சித்து கொண்டே, என்னிடம் இரண்டு வாகனங்களை கோரினார். 10 அமைச்சரவை பாதுகாவலர்களை கேட்டார்.
திருமணம் முடிக்காத 10 இளைஞர்களை ரணிலுக்கு அனுப்பி வைக்குமாறு நான் அமைச்சரவை பாதுகாப்பு பிரிவுக்கு அறிவித்தேன் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மரண வீட்டுக்கு வந்திருப்பதையும் மறந்து விட்டு ஜனாதிபதி பலமாக சிரித்து பேசியதாக கூறப்படுகிறது.
எது எப்படி இருந்த போதிலும் எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்டிருந்த இரண்டு பாதுகாப்பு வாகனங்கள் பயன்படுத்த முடியாதளவில் பழுதடைந்துள்ளன. இதன் காரணமாகவே அவர் புதிய வாகனங்களை கோரியுள்ளதாக விசாரித்ததில் தெரியவந்துள்ளது.
அத்துடன் எதிர்வரும் காலங்களில் எதிர்க்கட்சித் தலைவரின் சுற்றுப் பயணங்கள் அதிகரிக்கும் என்பதால், மேலதிகமாக 10 அமைச்சரவை பாதுகாப்பு அதிகாரிகளை கோரியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவருடன் தான் தொடர்ந்தும் தொடர்பில் இருப்பதாக காண்பிப்பதற்காகவே ஜனாதிபதி பகிரங்கமான இடத்தில் வைத்து இவ்வாறு கூறியிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGTWLZgw2.html

Geen opmerkingen:

Een reactie posten