தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 6 juni 2014

ஜெனிவா கூட்டத்தொடரில் மீண்டும் ஒலிக்கப் போகும் இலங்கை விவகாரம்..



பள்ளிவாசலை மாற்றுவது சிறுபான்மைக்கு விடுக்கப்படும் சவாலாகும்
தம்புள்ள பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசலை இடம் நகர்த்துவதானது சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்கு விடுக்கப்படும் சவாலாக கருதப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பள்ளிவாசல் இடம் நகர்த்தப்படும் விடயமானது பொதுமக்கள் விடயமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.


இந்த இடத்தை சில தரப்பினர் தொழுகை மண்டபமாக அடையாளப்படுத்தி வருவதாகவும் உண்மையில் சரியான முறையில் கட்டப்பட்ட ஓர் பள்ளிவாசலே இதுவெனவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த பள்ளிவாசலில் பல ஆண்டுகளாக மக்கள் தொழுகைகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.பள்ளிவாசலை இடம் நகர்த்த யார் இணக்கம் தெரிவித்தார்கள் அதற்கு அவர்களுக்கு காணப்படும் அதிகாரம் என்ன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் நாட்டின் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினதும் பிரச்சினையாகவே கருதப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.தேசிய அளவில் இந்தப் பிரச்சினை குறித்து பேசி வரும் முஸ்லிம் அமைச்சர்களை புறந்தள்ளி சில தனிப்பட்ட நபர்கள் ஏதேச்சையாக எவ்வாறு தீர்மானம் எடுக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


எந்தவொரு மதத்தையும் வழிபடக் கூடிய உரிமை நாட்டின் அனைத்து மக்களுக்கும் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். மாற்று இடமொன்றை பெற்றுத் தருவதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்த போதிலும் இதுவரையில் மாற்று இடமொன்று அடையாளம் காணப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
05 Jun 2014

http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1401954764&archive=&start_from=&ucat=1&

ஜெனிவா கூட்டத்தொடரில் மீண்டும் ஒலிக்கப் போகும் இலங்கை விவகாரம்..
ஜெனிவாவில் அடுத்தவாரம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரிலும், சிறிலங்கா நிலைமை குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும், 10ம் நாள் தொடங்கி 27ம் நாள் வரை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 26வது கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில் ஆரம்ப உரை நிகழ்த்தும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, தமது பணியகத்தின் செயற்பாடுகளின் நிலை குறித்து விளக்கமளிப்பார்.

வரும் ஓகஸ்ட் மாதத்துடன் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ள நவநீதம்பிள்ளை, சமர்ப்பிக்கும் கடைசி அறிக்கையாக இது இருக்கும்.

அத்துடன் ஆண்டு ஆணையாளரின் அறிக்கை குறித்த விவாதமும் நடக்கவுள்ளது.

நவநீதம்பிள்ளையின் அறிக்கையில், சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்கான ஐ.நா குழு பற்றிய அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அறிவிப்பை அடுத்து, சிறிலங்கா நிலை குறித்து பேரவையில் விவாதங்கள் எழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், வரும் 11ம் நாள் காலை தொடக்கம் மதியம் வரை நடக்கவுள்ள, ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு என்ற தலைப்பிலான குழு விவாதத்திலும் நவநீதம்பிள்ளை துவக்கி வைப்பாளராகப் பங்கேற்பார்.

இந்த விவாதத்திலும் சிறிலங்காவில் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்த தகவல்களும் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
06 Jun 2014

http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1402040692&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten