தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 5 juni 2014

ஹக்கீமிற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணையை கொண்டுவருமாறு அரசாங்கம் அழுத்தம்!

அடுத்த ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் ஜோஸ் ரமோஸ் ஹோட்டா?
[ வியாழக்கிழமை, 05 யூன் 2014, 02:12.20 AM GMT ]
எதிர்வரும் ஓகஸ்ட்டில் பதவி இளைப்பாறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு பதிலாக (Guinea-Bissau) கினியா பிஸோ நாட்டின் ஐநாவுக்கான பிரதிநிதி (Jose Ramos-Horta) ஜோஸ் ராமோஸ் ஹோட்டா நியமிக்கப்படலாம் என்று இன்னர் பிரஸ் சிட்டி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
எனினும் இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் செய்தியாளர் சந்திப்பில் வினவியபோது எந்த ஒரு பதிலும் வழங்கப்படவில்லை.
இந்தநிலையில் இந்தோனேசியாவின் தாருஸ்மானின் பெயரும், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இரண்டு வேட்பாளர்களின் பெயர்களும் இந்த பதவிக்கு பிரேரிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் பதவிக்கு நியமிக்கப்படலாம் என்று கூறப்படும் கினியா பிஸோவின், ஜோஸ் ராமோஸ் ஹோட்டா ஜப்பானை மையமாகக்கொண்ட யுபிரைன் டிவில் (UBrain) பணியாற்றியவர்.
அவர் அந்த நிறுவனத்தில் ஆலோசகராக இருந்துள்ளார் என்று இன்னர் சிட்டி பிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் செய்தியாளர் சந்திப்பின்போது பதில் வழங்கிய ஐக்கிய நாடுகள் செயலாளரின் பேச்சாளர் பர்ஹான் ஹக், அவ்வாறான தகவலை தாம் அறிந்திருக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
அவர் அந்த பதவியை வகித்திருந்தாலும் வகித்திருக்காவிட்டாலும் அது தொடர்பில் கருத்துக் கூறமுடியாது என்று ஹக் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTZLZfw2.html

காதலை ஏற்க மறுத்த ஆசிரியை சுட்டுக்கொலை
[ வியாழக்கிழமை, 05 யூன் 2014, 02:18.52 AM GMT ]
காதலை ஏற்க மறுத்த முன்பள்ளி ஆசிரியை ஒருவரை சுட்டுக்கொலை செய்த சம்பவமொன்று பிபிலைப் பகுதியின் மெதஹின்ன என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.
மெதஹின்ன என்ற இடத்தைச் சேர்ந்த அத்தநாயக்க முதியன்சலாகே ஜயலதா என்ற 40 வயது நிரம்பிய குடும்பப்பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவராவார்.
இப்பெண் தனது மகளுடன் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்த வேளை, வீட்டு யன்னல் வழியாக வந்த நபர் குறிப்பிட்ட முன்பள்ளி ஆசிரியையை துப்பாக்கியினால் சுட்டுவிட்டு தப்பிப் யோடியுள்ளார்.
க்கொலை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது கொலையுண்ட முன்பள்ளி ஆசிரியையுடன் கள்ளக்காதலை மேற்கொள்ள அக்கிராமத்தின் இளைஞர் ஒருவர் முயற்சித்துள்ளதாகவும் அவ் இளைஞனால் முன்வைக்கப்பட்ட காதல் கோரிக்கையை குறிப்பிட்ட ஆசிரியை நிராகரித்ததாகவும் இதனால் ஆத்திரம் கொண்ட குறித்த இளைஞன் ஆசிரியையை சுட்டுக் கொலை செய்து விட்டு தம்பியோடியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGTZLZfw3.html

ஹக்கீமிற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணையை கொண்டுவருமாறு அரசாங்கம் அழுத்தம்!
[ வியாழக்கிழமை, 05 யூன் 2014, 12:39.25 AM GMT ]
அமைச்சர் ரவுப் ஹக்கீமிற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு அரசாங்கத் தரப்பினர் தொடர்ந்தும் வலியுறுத்துவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பின் வரிசை ஆசனங்களில் அமர்ந்துள்ளவர்கள் இந்த வலியுறுத்தலை தொடர்ந்து தம்மிடம் விடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTZLZfw0.html


Geen opmerkingen:

Een reactie posten