தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 19 juni 2014

கண்டி பள்ளிவாசல் மீது தாக்குதல்!- தொடரும் பொதுபல சேனா அட்டகாசம்!



கண்டியில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றின் மீது பொதுபல சேனா ஆதரவாளர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது 
கண்டி, குருந்துகொல்லை பிரதேசத்தில் உள்ள ஜும்ஆ பள்ளிவாசலின் மீது வெள்ளிக்கிழமை ஒரு மணியளவில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலை மேற்கொண்டவர்கள் கற்கள் மற்றும் தடிகளை வீசி பள்ளிவாயிலின் கண்ணாடி ஜன்னல்களையும், மின் விளக்குகளையும் உடைத்துள்ளனர்.
தாக்குதல் தொடர்பான தகவல் அறிந்து பிரதேச வாசிகள் திரண்டு வந்த நிலையில், பொதுபல சேனா ஆதரவாளர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தகவலறிந்த பொலிசார் ஸ்தலத்துக்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பிரதேசத்தின் அமைதி நிலையை பேணுவதில் முஸ்லிம் மதகுருக்கள் பொலிசாருடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLaht0.html

Geen opmerkingen:

Een reactie posten