கம்பஸ் பிள்ளையின் கழுத்தில் கை வைத்த கயவர்கள்: மெமரி காட்டை பறிகொடுத்தார்கள் !
05 June, 2014 by admin
குறித்த பல்கலைக்கழக மாணவி, பல்கலைக்கழகத்தில் விரிவுரைகள் முடிவுற்று தான் தங்கியிருந்த பிரம்படியிலுள்ள வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்த போது,; மோட்டார் சைக்கிளில பின்னால் வந்த இருவர் சங்கிலியினை அறுத்துக் கொண்டு ஓடியுள்ளனர். இதன்போது மாணவி கூக்குரலிடவே அங்கு பொதுமக்கள் வருவதினை அவதானித்த சங்கிலித் திருடர்கள் நிலைதடுமாறி வீழ்ந்ததால் மோட்டார் சைக்கிளினை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு; தப்பி ஓடியுள்ளனர். தேவேளை மோட்டார் சைக்கிளில் இருந்து திருடர்கள் விழுந்தவேளை அவர்களில் ஒருவரது மோபைல் போனும் கீழே விழுந்துவிட்டது. இருப்பினும் அதனைப் பொறுக்கிக்கொண்டு அவர்கள் ஓடி மறைந்துவிட்டார்கள்.
ஆனால் அதன் கவர் மற்றும் மெமரி காட் ஆகியன அவ்விடத்திலேயே இருந்துள்ளது. பொலிசார் அனைத்தையும் கைப்பற்றியுள்ளார்கள். சங்கிலி திருடவந்து பேரிழப்புடன் ஓடிய திருடர்கள் இவர்களாகதான் இருக்க முடியும்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6931
கைதாகியுள்ள நந்தகோபன் உதவியோடு 4,000 பேரது பட்டியலை தயாரிக்கும் அரசு !
05 June, 2014 by admin
சமீபத்தில் இலங்கை அரசு வெளிநாடுகளில் உள்ள 16 அமைப்பை தடைசெய்தது மட்டுமல்லாது 400 தமிழர்களது பெயரையும் வெளியிட்டு, அவர்கள் இலங்கை வரமுடியாது என்றும் அறிவித்தது. அதுபோல தற்போது மேலதிகமாக சுமார் 4,000 பெயர்களை அடங்கிய பட்டியலை அவர்கள் தயாரித்து வருகிறார்கள். அதனை வெகு விரைவில் வெளியிடவும் உள்ளார்கள் என மேலும் அறியப்படுகிறது.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6929
Geen opmerkingen:
Een reactie posten