தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 5 juni 2014

மோடிக்கும் மகிந்தருக்கும் இடையே யுத்தம் ஆரம்பமாகுமா ? ஜி.எல் பீரிஸ் சொன்ன..

லண்டனில் சீனாவுக்கு எதிராக ஈழத் தமிழர்கள் ஆர்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்கள் !
05 June, 2014 by admin
1989ம் ஆண்டு சீனாவில் பெரும் கொலைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது அனைவராலும் அறியப்பட்ட விடையம். சீனாவில் உள்ள தியனான்மென் சதுக்கத்தில் பல மாணவர்கள் கூடி சீன அரசுக்கு எதிராக அமைதியான ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த ஆர்பாட்டத்தை அமெரிக்க அரசே திட்டமிட்டு செய்வதாக சீன அரசு குற்றஞ்சுமத்தியது. அங்கே குழுமி இருந்த பல நூறு மாணவர்களையும் மக்களையும் சீன இராணுவம் கண் மண் தெரியாமல் சுட்டுக்கொன்றது. அதுவும் அப்போது ஒரு முள்ளிவாய்க்கால் தான். அந்த அளவு மக்கள் இறந்துபோனார்கள். சுமார் 2,500 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அன்றைய தினம் அறிவிக்கப்பட்டது. அன் நாளை நினைவு கூர இன்றுவரை சீன அரசாங்கம் தடைவிதித்து வருகின்றது. ஆனால் நேற்றைய தினம்(04) லண்டனில் வசிக்கும் சீனர்கள் அங்குள்ள சீன தூதரகத்திற்கு முன்னதாக பாரிய ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

1989ல் கொல்லப்பட்ட தமது உறவுகளை அவர்கள் நினைவு கூர்ந்தார்கள். இவர்களோடு ஈழத் தமிழர்களும் இணைந்துகொண்டார்கள் என்பது தான் மிகவும் முக்கியமான விடையங்களுள் ஒன்றாகும். சீன அரசை எதிர்க்கும் சீனர்களோடு, ஈழத் தமிழர்களும் இணைந்து 1989ம் ஆண்டு சீன அரசு செய்த கொடுமையைக் கண்டித்தார்கள். அத்தோடு முள்ளிவாய்க்காலில் நடந்த அவலத்தைப் பற்றியும் அவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். இதனூடாக பாதிக்கப்பட்ட சமூகம் என்ற வகையில் ஈழத் தமிழர்களும், கொல்லப்பட்ட சீனர்களின் உறவினர்களும் லண்டனில் நேற்றைய தினம் இணைந்துகொண்டார்கள். இது மிகவும் ஒரு ராஜதந்திர ரீதியான நகர்வாக கருதப்படுகிறது. சீன அரசு மகிந்தருக்கு உதவிகளை வாரி வழங்கி வரும்வேளையில், ஈழத் தமிழர்கள் இணைந்து இவ்வாறு செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். 



http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6927

மோடிக்கும் மகிந்தருக்கும் இடையே யுத்தம் ஆரம்பமாகுமா ? ஜி.எல் பீரிஸ் சொன்ன..
05 June, 2014 by admin
13 வது திருத்த சட்டத்தை உடனே அமுல்படுத்துமாறு நரேந்திர மோடி தெரிவித்த கருத்தை, மகிந்தர் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார் என அறியப்படுகிறது. காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை மாகாண சபைக்கு தாம் ஒருபொழுதும் வழங்கப்போவது இல்லை என்று மகிந்தர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். நேற்றைய தினம்(04) இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இது இவ்வாறு இருக்க, மகிந்தரின் இந்த முடிவை ஜொ.எல் பீரிஸ் இந்திய வெளியுறவுத் துறைக்கு அறிவித்து, அதனை நரேந்திர மோடிக்கு சொல்லுமாறு கூறியுள்ளாராம். இதனால் இந்திய வெளியுறவுத்துறை அதிருப்தி அடைந்துள்ளதாக புது தில்லியை ஆதாரம் காட்டி இந்திய செய்திச் சேவை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ராஜபக்ஷவுக்கு விடுத்த நேரடிக் கோரிக்கையை மகிந்தர் நிராகரித்துள்ளமை பெரும் பரபரபை ஏற்படுத்தியுள்ளது. சோனியா அரசுடன் மகிந்தர் கண்ணாம்மூச்சி விளையாடியதுபோல , நரேந்திர மோடியுடனும் மகிந்தர் விளையாட நினைக்கிறார். இந்த பாச்சா பலிக்குமா ? பொறுத்திருந்து தான் பார்கவேண்டும்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6928

Geen opmerkingen:

Een reactie posten