பிள்ளைகள் பெறுவதில் சிக்கலா?? என்னிடம் அறிவிக்கவும்! மேர்வின்
சிங்கள இனம் சிறுபான்மை இனமாக மாறி வருகிறது என்று கூறி கொண்டிருப்பதில் பயனில்லை எனவும் முடிந்தளவு பிள்ளைகளை பெற்றுக்கொள்ளுமாறும், அதில் பிரச்சினைகள் இருந்தால் தனக்கு அறிவிக்குமாறும் அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.
கட்டை பைக்குள் போட்டு கொள்ளும்படி பணத்தை சம்பாதிக்க முடியாது போகும் போது சிலர் எமக்கு எதிராக செயற்படுகின்றனர். ஜனாதிபதி, அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் மாத்திரம் முயற்சித்து நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. பிரதேச சபை முதல் அனைவரும் அதற்கு பங்களிப்பு வழங்க வேண்டும்.
எவர் எதனை கூறினாலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பது ஒரு குடும்பம் போன்றது. அதில் தாய் மற்றும் தந்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ.
இந்த குடும்பத்தை பிரிக்க எவருக்கும் இடமளிக்க முடியாது. ஜனாதிபதியின் குடும்பத்தினர் மற்றும் பொலியத்தையில் இருந்து வந்த என்னை தவிர ராஜபக்ஷ குடும்பத்தினர் பற்றி அறிந்தவர்கள் எவரும் இல்லை எனவும் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/72080.html
சூடுபிடிக்கும் “13+” சட்ட சர்ச்சைகள் நீங்குமா??
13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது, அதற்கு அப்பால் சென்று அதிகாரங்களை பகிர்வது ஆகிய இரண்டு விடயங்களுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முக்கியத்துவம் கொடுத்து வலியுறுத்தியிருக்கிறார்.
அதுவும் விரைவாக இதற்கான பணிகளை முன்னெடுக்குமாறும் அவர் கூறியிருக்கிறார்.
நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிடம் 13ஆவது திருத்தச்சட்டம் குறித்தும், மீனவர் பிரச்சினை குறித்தும் கேள்விகள் எழுப்பப்படலாம் என்று முன்கூட்டியே எதிர்பார்க்கப்பட்டது தான்.
நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிடம் 13ஆவது திருத்தச்சட்டம் குறித்தும், மீனவர் பிரச்சினை குறித்தும் கேள்விகள் எழுப்பப்படலாம் என்று முன்கூட்டியே எதிர்பார்க்கப்பட்டது தான்.
அதையும் தாண்டி, நரேந்திர மோடி முதல் சந்திப்பிலேயே, 13ஆவது திருத்தச்சட்டம் குறித்து கூடுதலாக வலியுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் 13ஆவது திருத்தச்சட்டம் என்ற பேச்சைக் கையில் எடுப்பதையே விரும்பவில்லை.
ஏனென்றால், 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதானால், மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகர்ந்தளிக்க வேண்டிய நிலை வந்துவிடும் என்று கருதுகிறது. அதற்காக, 13ஆவது திருத்தச்சட்டம் என்பது, ஏதோ அதிகாரங்களை அள்ளிக் கொடுக்கும் அட்சய பாத்திரம் என்று கருதுவதற்கில்லை.
அது ஓர் ஓட்டைப் பாத்திரம் தான் என்று வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அது ஓர் ஓட்டைப் பாத்திரம் தான் என்று வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அவ்வாறான ஓட்டைப் பாத்திரத்தை – ஒரு கையால் கொடுத்து மறு கையால் பறிக்கும் 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குக் கூட அரசாங்கம் தயாராக இல்லை. மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு விட்டால், அவை தனிநாடுகளாக உருவெடுத்து விடும் என்ற பிரமை ஒன்று தெற்கிலுள்ள சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தி அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தால், சிங்கள மக்களின் கோபத்துக்கு இரையாக நேரிடும் என்ற பயமும் அரசாங்கத்துக்கு உள்ளது.
இந்த அரசாங்கம் தெற்கிலுள்ள சிங்கள பௌத்த தேசியவாதிகளின் ஆதரவையே அதிகம் நம்பியுள்ளது. குறிப்பிட்ட சில முற்போக்கு சக்திகள் அரசாங்கத்துடன் இணைந்திருந்தாலும், சிங்கள, பௌத்த அடிப்படைவாதிகள் தான் அரசாங்கத்துக்கு பலமாக இருந்து வந்திருக்கின்றனர்.
இந்த அரசாங்கம் தெற்கிலுள்ள சிங்கள பௌத்த தேசியவாதிகளின் ஆதரவையே அதிகம் நம்பியுள்ளது. குறிப்பிட்ட சில முற்போக்கு சக்திகள் அரசாங்கத்துடன் இணைந்திருந்தாலும், சிங்கள, பௌத்த அடிப்படைவாதிகள் தான் அரசாங்கத்துக்கு பலமாக இருந்து வந்திருக்கின்றனர்.
ஆனால், அந்த அடிப்படைவாதிகளினது ஆதரவைக் கூட இப்போது அரசாங்கம் இழக்கத் தொடங்கியுள்ள நிலையில் தான், நரேந்திர மோடியின் அரசாங்கம் இந்தியாவில் பதவிக்கு வந்துள்ளது.
நரேந்திர மோடி பதவிக்கு வந்தவுடனேயே, 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தங்களைக் கொடுக்கத் தொடங்கியிருப்பது அரசாங்கத்துக்கு சிக்கலையே ஏற்படுத்தப் போகிறது.
ஏனென்றால், அரசாங்க கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒரு பகுதி 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவானவை. இன்னொரு பகுதி எதிர்ப்பானவை.
நரேந்திர மோடி பதவிக்கு வந்தவுடனேயே, 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தங்களைக் கொடுக்கத் தொடங்கியிருப்பது அரசாங்கத்துக்கு சிக்கலையே ஏற்படுத்தப் போகிறது.
ஏனென்றால், அரசாங்க கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒரு பகுதி 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவானவை. இன்னொரு பகுதி எதிர்ப்பானவை.
ஏற்கனவே, அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண, டியூ குணசேகர, நவீன் திசநாயக்க உள்ளிட்ட பலரும், 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும்படி அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க, தினேஷ் குணவர்தன போன்ற கடும் போக்கு அமைச்சர்கள், 13ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
இந்த நிலையில் நரேந்திர மோடி 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடை முறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்த ஆரம்பித்துள்ளது, அரசாங்கத்தை முடிவெடுக்க முடியாத குழப்பம் ஒன்றுக்குள் தள்ளிவிடக் கூடும்.
இந்த நிலையில் நரேந்திர மோடி 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடை முறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்த ஆரம்பித்துள்ளது, அரசாங்கத்தை முடிவெடுக்க முடியாத குழப்பம் ஒன்றுக்குள் தள்ளிவிடக் கூடும்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மட்டுமன்றி, அதற்கு வெளியே உள்ள சிங்கள, பௌத்த கடும் போக்கு அமைப்புகள் பலவும் கூட, 13ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்றே வலியுறுத்துகின்றன.
இந்த அமைப்புகளுக்கெல்லாம், நரேந்திர மோடியின் வலியுறுத்தலால் உதறல் எடுக்க ஆரம்பித்துள்ளது. ஏனென்றால், அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுத்து, 13ஆவது திருத்தச்சட்டத்தை இந்தியா நடைமுறைப்படுத்தச் செய்து விடுமோ என்ற கலக்கம் அவர்களுக்கு உருவெடுத்துள்ளது. மன்மோகன்சிங் மெதுவாக காலை வைத்தார், நரேந்திர மோடி வேகமாக காலை வைத்துள்ளார் என்று எச்சரித்துள்ள தேசப்பற்று தேசிய இயக்கத்தின் பொதுச்செயலர் வசந்த பண்டார, உடனடியாக 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு சாவுமணி அடிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அரசியலமைப்பு மாற்றம் ஒன்றின் ஊடாக 13ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்ற அழுத்தங்களும், குரல்களும் இனித் தெற்கில் தீவிரமடையக் கூடும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கமும் கூட, 13ஆவது திருத்தச்சட்டம் ஒழிக்கப்படுவதையே விரும்புகிறது.
ஆனால், அது இந்தியாவின் பகையை தேடித்தந்து விடும் என்பதால் தான், 13ஆவது திருத்தச்சட்டத்தின் மீது கை வைக்காமல் – அதேவேளை, அந்த திருத்தச்சட்டத்தின் மூலம் மாகாணசபைகளுக்கு பகிரப்பட்டுள்ள அதிகாரங்களையும் வழங்காமல், அரசாங்கம் இழுத்தடித்து வருகிறது,
ஆனால், அது இந்தியாவின் பகையை தேடித்தந்து விடும் என்பதால் தான், 13ஆவது திருத்தச்சட்டத்தின் மீது கை வைக்காமல் – அதேவேளை, அந்த திருத்தச்சட்டத்தின் மூலம் மாகாணசபைகளுக்கு பகிரப்பட்டுள்ள அதிகாரங்களையும் வழங்காமல், அரசாங்கம் இழுத்தடித்து வருகிறது,
இதுவரை இந்தியாவில் வலுவான ஓர் அரசாங்கம் இல்லாததால், இலங்கை அரசாங்கத்தின் இந்த இழுத்தடிப்பு உத்தியை அது கண்டுகொள்ளவில்லை. ஆனால், நரேந்திர மோடி அரசாங்கம் வலுவான அரசாங்கமாக உருவாகியுள்ளதாலும், வலிமையான இந்தியாவை உருவாக்கும் கொள்கையைக் கொண்டதாக இருப்பதாலும், இந்தியாவினது கருத்து உதாசீனம் செய்யப்படுவதை தமக்கான சவாலாகவே கருதும்.
அதாவது, இந்தியாவுக்கு சவால் விடும் வகையில், இலங்கை செயற்படுவதாக இந்திய அரசாங்கம் உணர்ந்து கொண்டால், அது இலங்கை அரசாங்கத்துக்கு ஆபத்தாக முடியும்.
அதாவது, இந்தியாவுக்கு சவால் விடும் வகையில், இலங்கை செயற்படுவதாக இந்திய அரசாங்கம் உணர்ந்து கொண்டால், அது இலங்கை அரசாங்கத்துக்கு ஆபத்தாக முடியும்.
ஏற்கனவே மன்மோகன்சிங் அரசாங்கம் நிலையான அரசியல் தீர்வு மற்றும் 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்திய போது தான், அந்த சவாலைச் சமாளிப்பதற்கு, அரசாங்கம் தெரிவுக்குழுவைக் கையில் எடுத்தது. தெரிவுக்குழுவில் வைத்து, 13ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிப்பதே அரசாங்கத்தின் இலக்காக இருந்தது.
ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி.பி.யும் அதில் இணைந்துகொள்ள மறுத்து விட, ஐ.தே.க.வும் அதையே காரணமாகக் கூறி, தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ளவில்லை.
இதனால், சட்டரீதியாக 13ஆவது திருத்தச்சட்டத்தை செயலிழக்க வைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதனால், சட்டரீதியாக 13ஆவது திருத்தச்சட்டத்தை செயலிழக்க வைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.
இப்போதும் கூட, அரசியல் தீர்வு என்ற பெயரில் தெரிவுக்குழுவுக்குள் கூட்டமைப்பை இழுத்து வந்து, 13ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிப்பதற்கே அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
எதிர்க்கட்சிகள் தான் அதற்குப் பிடி கொடுக்காமல் நழுவிக் கொண்டிருக்கின் றன. இந்த நிலையில், நரேந்திர மோடி அரசாங்கம் 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியுள்ளதும், அதனை நடைமுறைப்படுத்த தாம் முழு ஆதரவு அளிப்போம் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. அறிவித்துள்ளதும், அரசாங்கத்துக்கு நெருக்கடியைக் கொடுக்கப் போகிறது. ஏனென்றால், பிரதான எதிர்க்கட்சியே ஆதரவளிக்கும் போது, அரசாங்கம் அதனைச் செயற்படுத்தலாம் என்று இந்தியா கூற முனையும்.
எதிர்க்கட்சிகள் தான் அதற்குப் பிடி கொடுக்காமல் நழுவிக் கொண்டிருக்கின் றன. இந்த நிலையில், நரேந்திர மோடி அரசாங்கம் 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியுள்ளதும், அதனை நடைமுறைப்படுத்த தாம் முழு ஆதரவு அளிப்போம் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. அறிவித்துள்ளதும், அரசாங்கத்துக்கு நெருக்கடியைக் கொடுக்கப் போகிறது. ஏனென்றால், பிரதான எதிர்க்கட்சியே ஆதரவளிக்கும் போது, அரசாங்கம் அதனைச் செயற்படுத்தலாம் என்று இந்தியா கூற முனையும்.
ஆனால், சிங்களத் தேசியவாதிகளினது விருப்பம் அதற்கு எதிர்மாறானதாக இருப்பதால், யாருடைய விருப்பத்தை நிறைவேற்றுவது என்ற சிக்கல் அரசாங்கத்துக்கு ஏற்படும்.
போர் முடிந்து விட்ட நிலையில், போரை வைத்தோ அதில் பெற்ற வெற்றியை வைத்தோ, புலிகளை வைத்தோ அரசியல் நடத்த முடியாது. அந்த நிலை மாறி விட்டது.
போர் முடிந்து விட்ட நிலையில், போரை வைத்தோ அதில் பெற்ற வெற்றியை வைத்தோ, புலிகளை வைத்தோ அரசியல் நடத்த முடியாது. அந்த நிலை மாறி விட்டது.
எனவே, புதியதொரு விவகாரத்தை முன்னிலைப்படுத்தி அரசியல் நடத்தினால்தான் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியான நிலையில், அரசாங்கத்துக்குள் இருக்கும் கடும்போக்கு சக்திகள் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை வெளியிடத் தொடங்கிவிட்டன. அவர்களுக்கு நரேந்திர மோடியின் அழுத் தம் புதிய உற்சாகத்தைக் கொடுக்கும். 13ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்க வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தை தொடங்கலாம்.
அத்தகையதொரு நிலை உருவானால், அரசாங்கம், தான் யார் பக்கம் என்பதை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். ஏனென்றால், 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு தான் ஆதரவு என்றோ எதிர்ப்பு என்றோ அரசாங்கம் இதுவரை கூறவில்லை.
ஆனால், அதை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறது. முன்னர், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும். இந் திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா ஆகியோரிடம் மட்டுமன்றி இப்போதைய இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜிடம் கூட, 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகவும், அதற்கு அப்பால் செல்வதாகவும் வாக்குறுதியளித்திருந்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ. ஆனால், பின்னர் அவ்வாறு எந்த வாக்குறுதியும் கொடுக்கப்படவில்லை என்று அரசாங்கம் நிராகரித்திருந்து.
இந்தநிலையில், இப்போது கூட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக்கொடுத்த அழுத்தம் குறித்து அரசாங்கம் வாய்திறக்க வில்லை. இதிலிருந்து, அரசாங்கம் 13ஆவது திருத்தச்சட்ட விவகாரத்தில் இன்னமும் இந்தியாவுடன் விளையாடலாம் என்றே நினைக்கிறது போலும்.
ஆனால், நரேந்திர மோடி அரசாங்கம், அதற்கு இடம்கொடுக்காது என்றே கருதப்படுகிறது. இந்தநிலையில் 13ஆவது திருத்தச்சட்டம் என்பது, வரும் நாட்களில் தீவிரமான சர்ச்சையாக இலங்கை அரசியலில் உருவெடுக்கும் வாய்ப்புகள் தோன்றியுள்ளன.
13ஆவது திருத்தச்சட்டம் மாகாணசபைகளுக்கோ தமிழருக்கோ முழுமையான அதிகாரங்களை அளிக்கக் கூடியதொன்றாக இல்லாவிட்டாலும், இதன் மூலம் உருவாக்கக் கூடிய கலகம், ஒருவேளை தமிழருக்கு கொஞ்சமேனும் நன்மையளிப்பதாக அமை யக்கூடும்.
-ஹரிகரன்-
http://www.jvpnews.com/srilanka/72093.html
Geen opmerkingen:
Een reactie posten