[ சனிக்கிழமை, 21 யூன் 2014, 03:47.56 PM GMT ]
'மேரி எனும் மரியா’ என்ற இவரது சிறுகதைத் தொகுப்பு சிங்கள அரசால் 2000-ம் ஆண்டில் தடை செய்யப்பட்டது. ஆனாலும், அச்சம் இல்லாமல் தமிழர் தரப்பு நியாயங்களுக்காக இவரது கவிதைகள் பேசின.
கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான வியாபாரத்தளம் ஒன்றை இரண்டு பேர் இன்று புகைப்படம் எடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை அரசால் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்ட போது, இலங்கையில் வாழ முடியாமல் வெளியேறினார் மஞ்சுள வெடிவர்தன.
சிங்களத்தில் அவர் எழுதிய கவிதைகளை, ஈழத்து தமிழ் இலக்கிய ஆளுமைகளான பஹீமா ஜஹான், எம்.ரிஷான் ஷெரீப் ஆகிய இருவரும் தமிழுக்குக் கொண்டுவந்துள்ளனர்.
''சிங்களவர் மூலம் நிகழ்த்தப்பட்ட அடாவடித்தனங்கள் 49 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்களைச் சங்காரம் செய்தவாறு நிறைவடைந்த வேளையில், சிங்களத்தில் கவிதை எழுதுவதைத் தவிர வேறு எதனையும் செய்ய இயலாதிருந்த போது நான் அதனைச் செய்தேன்.
தொடர்ந்தும் நான் சிங்களவர்களில் ஒருவராக இருப்பதனால் சிங்களவரின் மனச்சாட்சியில் இருந்து விடுபடுவதற்கு என்னால் இயலவில்லை.
ஆயினும், இந்தக் கவிதைப் புத்தகத்தைப் பொறுத்தவரை இது சொற்பமான சிங்களவர்களின் மனச்சாட்சியின் வெளிப்பாடாகும்'' என்று சொல்கிறார் மஞ்சுள வெடிவர்தன.
இந்தக் கவிதைகள் சிங்களர்களின் மனச்சாட்சியில் சலனம் ஏற்படுத்தியதா எனத் தெரியாது. ஆனால், தமிழர் கண்ணீர் சிங்களவர்களையும் நனைக்கத் தொடங்கியிருக்கிறது என்பதற்கு உதாரணமான எழுத்துக்கள்.
சித்திரவதை செய்யப்பட்டு, பழிவாங்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு மடிந்த தமிழர்களை, கழிவிரக்கத்தோடு பார்த்துக் கண்ணீர் சிந்தக் கூடியவராக மஞ்சுள வெடிவர்தன இல்லை.
மனித உரிமை, போர்க்குற்றம், ஐயோ, கடவுளே.... என்று ஈழக் கொடூரத்தை இவர் பார்க்கவில்லை.
ஈழ விடுதலையின் உண்மையான அரசியலை உணர்ந்தவராக, அதனை ஆதரிப்பவராக இவரது எழுத்துக்கள் மூலம் புரியவருகிறது.
'எந்நாளும் யுத்தத் தீ தெற்கிற்கு கண்காட்சிதான்’ என்ற வரியில் அரை நூற்றாண்டு காலத் துன்பங்களை கொட்டிவிடுகிறார்.
அதனால்தான், அதிகாரம் மஞ்சுள வெடிவர்தனவை துரத்துகிறது. ஆனால், அவர் விடாமல் எழுதுகிறார். 'ஆணியடிக்கப்பட்ட கரமொன்றால் கவிதையெழுதுவது எவ்விதம்?’ என்று கேட்டபடி எழுதியபடி இருக்கிறார்.
கொள்ளுப்பிட்டியில் முஸ்லிம் வியாபாரத்தளத்தை புகைப்படம் எடுத்ததாக முறைப்பாடு
[ சனிக்கிழமை, 21 யூன் 2014, 03:26.20 PM GMT ]
இதன்போது அவர்கள் குறித்த வியாபாரத்தளம் முஸ்லிம் ஒருவருடையதா? என்று அவர்கள் அருகில் இருந்தவர்களிடம் கேட்டதாக நவமணி பத்திரிகை தமது டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்ற சூழ்நிலையில் முஸ்லிம் வியாபாரத்தளங்கள் தொடர்பில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையிலேயே புகைப்பட செய்தி வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து குறித்த வியாபாரத்தளத்தின் உரிமையாளர் கொள்ளுப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten