தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 7 juni 2014

ஐ. நா. விசாரணைக் குழுவிலிருந்து இருவர் நீக்கம்! திவயின..

புலிகளின் முக்கிய தலைவர் கரிகாலனின் வழக்கில், இராணுவத்திற்கு நோட்டீஸ்

இந்த மனுக்கள் தொடர்­பான வழக்­கு­களில், இவர்கள் கடை­சி­யாக இரா­ணு­வத்தின் பொறுப்பில் இருந்து காணாமல் போயி­ருப்­பது தொடர்பில் நேரில் கண்­ட­வர்­களின் தக­வல்­களும், வலு­வான ஆதா­ரங்­களும் ஆவ­ணங்­க­ளாக இணைக்­கப்­பட்­டி­ருந்­தன.
இந்த வழக்­குகள் வவு­னியா மேல் நீதி­மன்­றத்தில் விசா­ர­ணைக்­காக எடுத்­துக்­கொள்­ளப்­பட்­ட­போது, மனுக்­களை ஆராய்ந்த நீதி­பதி, இவர்கள் காணாமல் போயி­ருப்­பது தொடர்பில் குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள இரா­ணுவ தரப்பின் கருத்­துக்­களை நீதி­மன்­றத்தில் வந்து தெரி­விப்­ப­தற்­காக சந்­தர்ப்பம் வழங்கி, அவர்­க­ளுக்கு நோட்டீஸ் அனுப்­பு­மாறு உத்­த­ர­விட்­டுள்ளார்.
இந்த வழக்கில் காணாமல் போயி­ருப்­ப­வர்­களின் சார்பில் சிரேஸ்ட மனித உரி­மைகள் சட்­டத்­த­ரணி கே.எஸ்.ரட்­னவேல், சட்­டத்­த­ரணி அன்ரன் புனி­த­நா­ய­கத்­துடன் நீதி­மன்­றத்தில் ஆஜ­ரா­கி­யி­ருந்தார்.
விடு­த­லைப்­பு­லி­களின் பொரு­ளா­தா­ரத்­துறை பொறுப்­பாளர் கரி­காலன் எனப்­படும் சிவ­ஞானம் கோபா­ல­ரட்னம், அவ­ரு­டைய மனைவி டாக்டர் சிவ­லிங்கம் பத்­ம­லோ­ஜினி ஆகியோர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முல்­லைத்­தீவு வட்­டு­வாகல் பகு­தியில், சர­ண­டை­கின்ற விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்­க­ளுக்குப் பாது­காப்பும், பொது­மன்­னிப்பும் வழங்­கப்­படும் என்று ஒலி­பெ­ருக்­கிகள் மூல­மாக, அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­பட்ட பகி­ரங்­க­மான உத்­த­ர­வா­தத்­தை­ய­டுத்து, இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்­ததன் பின்னர், காணாமல் போயி­ருப்­ப­தாக கரி­கா­லனின் மாமி­யாரும், அவ­ரு­டைய டாக்டர் மனைவி பத்­ம­லோ­ஜி­னியின் தாயா­ரு­மா­கிய சிவ­லிங்கம் இலக்­குமி தனது ஆட்­கொ­ணர்வ மனுவில் தெரி­வித்­துள்ளார்.
இவர்கள் இரு­வரும் ஏனைய விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்­க­ளுடன் இரா­ணு­வத்­தி­ன­ரிடம், சர­ண­டைந்­ததைத் தானும், தனது உற­வி­னர்­களும் நேரில் கண்­ட­தாக இந்த ஆட்­கொ­ணர்வ மனுவில் சத்­தி­யக்­க­ட­தா­சி­களின் மூலம் உறு­திப்­ப­டுத்தி தெரி­வித்­துள்­ளனர்.
இதே­போன்று வவு­னியா கிடாச்­சூ­ரியில் ஒரே வள­வுக்­கா­ணியில் வசித்து வந்த முரு­கையா ரூப­காந்தன், அன்ரன் ஜோசப் மணி­வண்ணன் ஆகிய இரண்டு இளை­ஞர்­களும், கிடாச்­சூரி இரா­ணுவ முகாமில் கட­மை­யாற்றி வந்த திலிப்­குமார் என்ற இரா­ணுவ சிப்­பா­யினால் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 16 ஆம் திகதி விசா­ர­ணைக்­காக முகா­முக்கு அழைத்துச் செல்­லப்­பட்­டதன் பின்னர் காணாமல் போயி­ருப்­ப­தாக ரூப­காந்­தனின் மனைவி லூசி­யாவும், மணி­வண்­ணனின் தாயார் அன்ரன் ஜோசப் சிதம்­பரம் ஆகியோர் வவு­னியா மேல் நீதி­மன்­றத்தில் ஆட்­கொ­ணர்வு மனுக்கள் தாக்கல் செய்­துள்­ளனர்.
இதே­வேளை, கிளி­நொச்­சியைச் சேர்ந்த சுப்­பையா அண்­ணா­மலை என்­பவர் தனது வாக­னங்கள் திருத்­து­கின்ற மோட்டார் மெக்­கா­னிக்­காகத் தொழில் செய்து வந்த தனது மகன் அண்­ணா­மலை ஆனந்தன் வவு­னியா மடுக்­கந்தை பகு­தியில் கராஜ் நடத்தி வந்­த­போது 2006 ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதி கைது செய்­யப்­பட்­ட­தாக, வவு­னியா ஜோசப் முகா­முடன் இணைந்­தி­ருந்த 23 ஆவது இரா­ணுவ கட்­டளைத் தலை­மை­ய­கத்தி;ன் நிர்­வாக அதி­கா­ரி­யினால் எழுத்து மூல­மாக அறி­விக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து அவர் காணாமல் போயி­ருப்­ப­தா­கவும், அவரை நீதி­மன்­றத்தில் கொண்டு வந்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி வவுனியா மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
ஐந்து பேர் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நான்கு ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான வழக்குகளில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக அவகாசம் வழங்கி, விசாரணைகளை எதிர்வரும் ஜுலை மாதம் 2 ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்
http://www.jvpnews.com/srilanka/72233.html

ஐ. நா. விசாரணைக் குழுவிலிருந்து இருவர் நீக்கம்! திவயின..

ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பு காரணமாகவே இந்த பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் முன்னாள் அதிகாரிகளான ஜெப்ரி ரொபர்ட்சன், டெனிஸ் ஹெலிடே ஆகியோரின் பெயர்களே நீக்கப்பட்டுள்ளன.
இவர்கள் புலம்பெயர் புலிகளுடன் சம்பந்தப்பட்டுள்ளனர் என தெரியவந்ததை அடுத்தே இவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
விசாரணைக் குழுவின் தலைவராக ஐக்கிய நாடுகளின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் உயிரிழந்த புலிகளின் தலைவர் ஒருவருக்காக இரங்கல் செய்தியை வெளியிட்டவர் என தெரியவந்துள்ளது என்றும் திவயின கூறியுள்ளது.
கொபி அனான் புலிகளின் கிழக்கு மாகாண முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் கௌசல்யனின் மறைக்கு இரங்கல் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.நா மனித உரிமை பேரவையின் 26 வது மனித உரிமை கூட்டத் தொடர் எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளதுடன் இலங்கை சார்பில் ஜெனிவாவுக்கான நிரந்த பிரதிநிதி உள்ளிட்ட குழுவினர் அதில் கலந்து கொள்ள உள்ளனர்.
இதனிடையே போர் குற்றம் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட உள்ள குழுவிற்கு சாட்சியங்களை வழங்க புலம்பெயர் புலிகள் 21 சாட்சியாளர்களை தயார்ப்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது எனவும் திவயின மேலும் குறிப்பிட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/72251.html

Geen opmerkingen:

Een reactie posten