தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 6 juni 2014

இனப்படுகொலை பற்றிய ஜெயலலிதாவின் கருத்தை கண்டிக்கும்..

குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க வேண்டியது அவசியம்
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படவில்லை என இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என சபாநாயகர் சமால் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரித்தானிய பாராளுமன்றிலோ அல்லது வேறும் நிறுவனங்களிலோ இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டு வரும் போலி குற்றச்சாட்டுக்கள் முறியடிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

யுத்த காலத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடித்து வருவதாக சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு பாராளுமன்றங்களில் இலங்கை தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை பாராளுமன்றம் உரிய முறையில் பதிலளிக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்கள் எவ்வாறு பிரித்தானிய அரசியல்வாதிகளின் ஆதரவினை பெற்றுக் கொண்டார்கள் என்பது பற்றி உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
06 Jun 2014
http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1402041366&archive=&start_from=&ucat=1&
இனப்படுகொலை பற்றிய ஜெயலலிதாவின் கருத்தை கண்டிக்கும்..
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா, அளித்த மனுவில் 'சிறிலங்காவில் நடந்த இனப்படுகொலை' என்று குறிப்பிட்டதற்கு சிறிலங்கா அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிறிலங்கா அரசின் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், சிறிலங்காவில் நடந்ததை இனப்படுகொலை என்று வர்ணிப்பது தவறு. இதுகுறித்து இந்திய அரசாங்கத்துக்கு எமது முறையான எதிர்ப்பைத் தெரிவிப்போம்.

இந்தியாவில் நிலையான தனிப்பெரும்பான்மை அரசு அமைந்தது குறித்து சிறிலங்கா மகிழ்ச்சி அடைந்துள்ளது. தேர்தலுக்கு முன்பும் நாங்கள் இதையே கூறினோம்.

இந்தியாவில் நிலையான ஆட்சி அமைவது சிறிலங்காவுக்கு நல்லது.
இப்போது, தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவுக்கு முன்பு டெல்லியில் இருந்த செல்வாக்கு இருக்காது. இது குறித்து நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சரியான பக்கத்தில்- அதாவது சிறிலங்காவின் பக்கம் இருப்பார் என்று நம்புகிறோம், என்று கூறியுள்ளார்.
06 Jun 2014

http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1402040962&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten