தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 22 juni 2014

ஞானசார தேரர் கைது செய்யப்பட வேண்டும்!- அமைச்சர் வாசுதேவ கோரிக்கை

"வித் யூ வித்அவுட் யூ" என்ற இலங்கைத் திரைப்படம் தமிழகத்தில் ரத்து!
[ ஞாயிற்றுக்கிழமை, 22 யூன் 2014, 12:07.07 AM GMT ]
வித் யூ வித்அவுட் யூ” என்ற இலங்கை திரைப்படத்தை திரையிடும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை தமிழகத்தில் ரத்துச் செய்யப்பட்டது. 
தமிழ் குழு ஒன்றிடம் இருந்து விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை அடுத்தே அந்த திரையிடல் நிகழ்வு ரத்துச்செய்யப்பட்டதாக பிவிஆர் சினிமா தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படம் காண்பிக்கப்பட்டால் திரையரங்கு தாக்கப்படும் அத்துடன் அங்குள்ளவர்கள் கடத்தப்படுவார்கள் என்று அளவில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக பிவிஆர் சினிமாவின் சார்பில் சைலாதிட்டிய போரா என்பவர் தெரிவித்துள்ளார்.
இந்த திரைப்படம் இலங்கையின் பிரசன்ன வித்தனகேயினால் தயாரிக்கப்பட்டது.
2012ஆம் ஆண்டு அது இலங்கையில் “ஒப நெத்துவ ஒப எக்க” என்ற பெயரில் திரையிடப்பட்டது.
இதில் இந்திய நடிகை அம்ரிதா பாட்டில் நடிகர் சியாம் பெர்ணான்டோ ஆகியோர் நடித்திருந்தனர்.
நடிகை அமரிதா தமிழ் யுவதியாகவும், பெர்ணான்டோ இளைப்பாறிய இராணுவ வீரராகவும் சித்தரிக்கப்பட்;டு இருவரும் திருமணம் செய்து கொள்வதாக கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
http://www.tamilwin.com/show-RUmsyGRWLagw0.html
ஞானசார தேரர் கைது செய்யப்பட வேண்டும்!- அமைச்சர் வாசுதேவ கோரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 22 யூன் 2014, 12:25.10 AM GMT ]
அளுத்கம மற்றும் பேருவளை  சம்பவங்களுடன் தொடர்புடைய பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைதுசெய்யுமாறு  அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார். 
முஸ்லிம்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையில் இனரீதியான முரண்பாட்டை உண்டு பண்ணியமை தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்படவேண்டும் என்று அமைச்சர் கோரியுள்ளார்.
ஞானசார தேரருக்கு எதிராக முதலில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அத்துடன் அவரை சார்ந்துள்ளவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று அமைச்சர் கேட்டுள்ளார்.
அளுத்கம சம்பவங்கள் அரசாங்கத்துக்கு அவப்பேற்றை கொண்டு வருவதற்காக திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டவையாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை அளுத்கமவில் தாக்குதல் நடத்தியவர்கள் பிரதேசத்தில் உள்ளவர்கள் அல்ல.
அவர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் என்பது தொடர்பில் ஜனாதிபதி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRWLagw2.html

Geen opmerkingen:

Een reactie posten