தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 19 juni 2014

மகிந்த குடும்பத்தை அகற்றத் தயாராகும் மோடியின் இரகசியம் அம்பலம்..

காணாமற்போன குடும்பஸ்தர் வெருகல் ஆற்றில் சடலமாக

இந்த நிலையில், இன்று அவரது சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக தற்போது வாகரை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.jvpnews.com/srilanka/73855.html

பலாத்கார வழக்கில் பிரதேச சபைத் தலைவரின் இரத்த மாதிரி ஒத்த நிலை

களனி பல்கலைக்கழக பேராசிரியரான நில்மினி குணரத்ன இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜரான போதே இவ்வாறு தெரிவித்தாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு கிருஸ்மஸ் பண்டிகையன்று பிரித்தானிய பிரஜையான குராம் ஷேய்க் கொல்லப்பட்டதோடு, அவரது பெண் தோழி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/73858.html

மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனின் மரணத்தில் சந்தேகம்

கொழும்பு தெஹிவளை-அல்விஸ் வீதியில் அமைந்துள்ள நான்கு மாடிக் கட்டிடம் ஒன்றிலிருந்து விழுந்து உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளதாக தெஹிவளை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மரணித்த இளைஞனின் உடல்-பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது உடலில் பலத்த அடி காயங்கள் காணப்படுவதால் மேற்படி இளைஞன் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
மறுதினம் அக்கட்டிடத்தின் கீழ் மாடியில் குடியிருக்கும் ஒருவர் வழங்கிய தகவலின் படி இளைஞர் ஒருவர் மாடியிலிருந்து விழுந்ததாக தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.
வவுனியாவை சேர்ந்த 22 வயதுடைய சந்திரகுமார் கோபி ஆனந்தன் என்பவர் கடந்த 10ஆம் திகதி; தெஹிவளையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/73864.html

UNP – JVP ஐ.நா விசாரணையை ஆதரிக்கின்றன – JNP

இரண்டு கட்சிகளினதும் நடவடிக்கைகள் விசாரணைகளை ஆதரிக்கும் வகையில் அமைந்துள்ளதாக ஜே.என்.பி.யின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முசாம்மில் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைக் குழுவினை நாட்டுக்குள் அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்து நேற்றைய தினம் நடைபெற்ற வாக்கெடுப்பில், இரண்டு கட்சிகளும் வாக்களித் தவறியிருந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/73886.html

மகிந்த குடும்பத்தை அகற்றத் தயாராகும் மோடியின் இரகசியம் அம்பலம்..

இதன் போது மகிந்தராஜபக்ஷ தொடர்பில் நரேந்திரமோடிக்கு நல்ல அபிப்ராயம் ஏற்பட வில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. மேலும் மகிந்தராஜபக்ஷவும், அவரது சகோதரர்களும் சேர்ந்து, இலங்கையை சீரழித்துவிட்டார்கள் என்று மோடி கருதுகிறார். மோடி தமது குடும்ப உறுப்பினர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதற்கு எதிரானவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்படுமாக இருந்தால், அதற்கு இந்திய பிரதமரும் ஒத்துழைப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.jvpnews.com/srilanka/73889.html

Geen opmerkingen:

Een reactie posten