ஜேர்மனியில் உள்ள மோட்டர் வேயில் (நெடுஞ்சாலை) மே 18 பதாதைகள் தொங்குகிறது !
தமிழின அழிப்பு நாள் நினைவு சுமந்து பேர்லின் நகரில் பல்லாயிரக்கணக்காக மக்கள் வாகனத்தில் செல்லும் அதிவேக பாதையை மையமாக கொண்டு கவனயீர்ப்பு பதாகை கட்டப்பட்டது. "சிறிலங்காவின் இன அழிப்பு அரசியலை புறக்கணிப்பு செய்", "தமிழின அழிப்பு நாள் மே 18", "146 679 ஈழத்தமிழர்களுக்கு என்ன நடந்தது ?" , "ஐநா உள்ளக அறிக்கையின் அடிப்படையில் 70 000 சிறிலங்கா அரசால் கொல்லப்பட்டுள்ளார்கள்" போன்ற தகவல்கள் எழுதப்பட்ட பதாகைகள் அதிவேக பாதையை மையமாக கொண்டு கட்டப்பட்டது. ஜேர்மனியில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழு(TCC) இன் ஏற்பாட்டில் இப்பதாதைகள் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையம அகும்.
Geen opmerkingen:
Een reactie posten