தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 20 mei 2014

மோடி தடாலடி அறிவிப்பு: ஈழத் தமிழர் பாதுகாப்பு விடையத்தில் கவனம் செலுத்துவேன் !


இந்தியாவில் சோனியா தலைமையில் செயல்பட்ட காங்கிரஸ் அரசு போலவே பா.ஜ.காவும் இருக்கும் என்றும், மன் மோகன் சிங்கைப்போலவே மோடியும் இருப்பார் என்றும் இலங்கை அரசு தப்புக்கணக்கு போட்டு வருகிறது. தமிழ் நாட்டில் செல்வி ஜெயலலிதாவின் கட்சி அமோக வெற்றிபெற்றாலும், அது டெல்லியில் எந்த ஒரு அழுத்தத்தையும் ஏற்படுத்தப்போவது இல்லை. தனிப்பெரும்பாண்மையோடு நரேந்திர மோடியின் கட்சி வெறிபெற்றுள்ளது. இன் நிலையில், நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவர் மதிமுக செயலாளர் வைகோ தான். அவர் நரேந்திர மோடியை சந்திக்கச்சென்ற வேளை, நான் வென்றதை விட நீங்கள், வெல்லாமல் போய்விட்டீர்கள் என்பது தான் எனக்கு கவலையாக உள்ளது என்று சொல்லும் அளவுக்குக்கு வைகோ - நரேந்திர மோடி உளவு பலமாக உள்ளது.

இதேவேளை புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி இன்று செவ்வாய்க்கிழமை, மாலை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கு முன்னதாக அவர் உணர்வாளர் வைகோ அவர்களை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது தான் ஈழத் தமிழர்களின் பாதுகாப்பை நிச்சயம் உறுதிப்படுத்துவேன் என்று தெரிவித்துள்ளார் என்ற செய்திகள் டெல்லியில் இருந்து வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழர்கள், என்ற சொற்பதத்தை விடுத்து, அவர் ஈழத் தமிழர்கள் என்ற சொற்பதத்தைப் பாவித்துள்ளமை, தமிழர்கள் மத்தியில் சிறிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தீவிர இந்துசமய பக்தரான நரேந்திர மோடிக்கு, இந்து ஆலயங்களில் யாராவது கை வைத்தால் பிடிக்காது. ஈழத்தில் இந்து ஆலயங்களை, பெளத்த பிக்குகள் நாசம் செய்வது தொடர்பான அறிக்கையை, தமிழ் அமைப்புகள் தயாரித்து அதனை மோடிக்கு அனுப்பினால், நிச்சயம் அவர் கவனம் ஈழத் தமிழர்கள் மேல் திரும்பும் .இதில் எந்த ஐயமும் இல்லை எனலாம்

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6861

Geen opmerkingen:

Een reactie posten