தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 15 maart 2014

பொன் அணிகளின் போர்!- சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவன் மோதலில் பலி!

பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிக்கும் இடையில் இன்று நடைபெற்ற துடுப்பாட்ட போட்டியில் ரசிகர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிக்கும் இடையிலான 26வது ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ண ஒருநாள் துடுப்பாட்டப் போட்டி, இன்று வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
50 பந்து பரிமாற்றங்களைக் கொண்ட இப் போட்டியில் 40 பந்து பரிமாற்றம் முடிவடைந்த நிலையில் ரசிகர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலிலேயே குறித்த இளைஞன் மைதானத்திலுள் வைத்து அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
படுகொலையானவர் பிரதான வீதி யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரும் சென்.பற்றிக்ஸ்  கல்லூரி பழைய மாணவனுமான ஜெயரட்ணம் டினோசன் அமலன் (வயது 24 ) என்னும் ஒரு பிள்ளையின் தந்தையார் ஆவார்.
மோதல் சம்பவம் நடைபெற்ற மைதானத்தில் பொலிசார் கடமையில் இருந்த போதிலும் மோதலை தடுக்காமல் அவர்கள் வேடிக்கை பார்த்ததாகவும் மைதானத்தில் இருந்து 200 மீற்றர் தூரத்திலையே வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் அமைந்திருந்த போதிலும் மேலதிக பொலிசாரை அழைத்து மோதலை தடுக்காமல் இருந்ததாவும் சென்.பற்றிக்ஸ் கல்லூரி மாணவர்களால் குற்றம் சாட்டப்படுகின்றது.
அதேசமயம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி மாணவர்கள் பொலிசாரின் அசண்டையீனத்தால் தான் இந்த கொலை நிகழ்ந்ததாகவும் குறித்த பொலிசார் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் அதற்கு ஊடகங்களே துணைபுரிய வேண்டும் எனக் கோரி யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகை காரியாலயம் முன்பாக சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்
அதேவேளை யாழில் நடைபெற்று வரும் மற்றுமொரு துடுப்பாட்ட போட்டியான 'வடக்கின் பெருஞ் சமர்'' என வர்ணிக்கப்படும் யாழ்.மத்திய கல்லூரி, யாழ்.புனித பரியோவான் கல்லூரி அணிகளுக்கிடையிலான 108 வது துடுப்பாட்ட போட்டியில் நடுவர் வழங்கிய தீர்ப்பு சர்ச்சையானதால் ஏற்பட்ட குழப்ப நிலையினால் போட்டி, முடிவு எதுவுமின்றிக் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten