தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 24 maart 2014

தமிழ் மாணவர்கள் மீது 45 சிங்கள மாணவர் இணைந்து பொல்லால் தாக்குதல் !

மட்டக்களப்பு வந்தாறு மூலையில் உள்ள பல்கலைக் கழகத்தின் விடுதியில் தங்கியிருந்த அனைத்து தமிழர் மாணவர்களும் அங்கிருந்து வெளியேறியுள்ளார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது. கடந்த சனிக்கிழமை அன்று, பல்கலைக் கழகத்தில் 1ம் ஆண்டு படித்துவரும் தமிழ் மாணவர்களில் ஒருவருக்கு பிறந்த நாழ் கொண்டாடப்பட்டுள்ளது. அவர்கள் தங்கியிருந்த விடுதியில் அவர்கள் கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடிக்கொண்டு இருந்தவேளை, அங்கே திரண்டு வந்த சுமார் 45 சிங்கள மாணவர்கள் பொல்லு, இரும்புக் கம்பி, மற்றும் சிறிய கத்திகளால் தமிழ் மாணவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இதனால் 7 தமிழ் மாணவர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் மேலும் அறியப்படுகிறது. 

இலங்கையில் தமிழ் மாணவர்கள் என்ன பிறந்த நாளைக் கொண்டாடக்கூட முடியாதா ? என்று பல்கலைக் கழக மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். இத்தாக்குதல் நன்கு திட்டமிடப்பட்டே நடைபெற்றுள்ளது என தமிழ் மாணவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதேவேளை தலையில் பலத்த அடிகாயங்களுக்கு உள்ளான தமிழ் மாணவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகிறார்கள். இதன் காரணமாக பல தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழக விடுதியை காலிசெய்து வெளியேறியுள்ளார்கள். மேலும் இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த சில மூத்த தமிழ் மாணவர்கள், தாக்கிய சிங்கள மாணவர்கள் சிலரை அடையாளம் கண்டு மீண்டும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இதனால் 2 சிங்கள மாணவர்கள் காயமடைந்துள்ளார்கள்.

தமிழர்கள் சும்மா இருந்தால் கூட வம்புக்கு இழுக்கும், இச் சிங்கள காடையர் கூட்டம் என்று தான் அடங்குமோ ?


http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6579

Geen opmerkingen:

Een reactie posten