தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 4 mei 2014

இலங்கை எதிர்கொள்ளும் மற்றொரு சர்வதேச அழுத்தம்!

மோதல்­களின் போது பாலியல் வன்­மு­றை­களைத் தடுப்­ப­தற்­கான ஐ.நா. பிர­க­ட­னத்தில் இலங்­கையும் கையெ­ழுத்­திட வேண்டும் என்ற அழுத்­தங்கள் அதி­க­ரித்து வரு­கின்­றன.  அண்­மையில் பிரித்­தா­னியா இதனை வெளிப்­ப­டை­யா­கவே வலி­யு­றுத்­தி­யி­ருந்­தது.
இலங்கை மீதான இந்த அழுத்­தங்கள் அதி­க­ரித்து வரு­வதன் பின்­ன­ணிக்கு, போரின் போதும், போருக்குப் பின்­னரும் தொடரும் பாலியல் வன்­மு­றை­களே காரணம் என்­பதில் சந்­தே­க­மில்லை.
கடந்­த­ வாரம், மோதல்கள் நிலவும் இடங்­களில் இடம்­பெறும் பாலியல் வன்­மு­றைகள் தொடர்­பான ஐ.நா. பொதுச் ­செ­ய­லரின் சிறப்புப் பிர­தி­நி­தி­யான சாய்னாப் ஹவா பங்­கு­ரா­வினால் தயா­ரிக்­கப்­பட்ட, மோதல்­களின் போதான பாலியல் வன்­முறைகள் தொடர்­பான கடந்த ஆண்­டுக் கான அறிக்கை, ஐ.நா. பாது­காப்புச் சபைக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டது.
பின்னர், அந்த அறிக்­கையை ஐ.நா. பிர­தி­நிதி சாய்னாப் ஹவா நியூ­யோர்க்கில் வைத்து வெளி­யிட்­டி­ருந்தார்.
இந்த அறிக்­கையில், தற்­போது மோதல்கள் நடந்து வரும் நாடு­களில் இடம்­பெற்று வரும் பாலியல் வன்­மு­றைகள் குறித்தும், போருக்குப் பிந்­திய சூழலில் இடம்­பெறும் பாலியல் வன்­மு­றைகள் குறித்தும் விரி­வாக விளக்­கப்­பட்­டுள்­ளது.
இந்தப் பட்­டி­யலில் 21 நாடுகள் இடம்­பி­டித்­தி­ருந்­தன. அதில் இலங்­கையும் ஒன்­றாகும். இலங்­கையில், போரின் போது இடம்­பெற்ற பாலியல் வன்­மு­றைகள் குறித்தும், போருக்குப் பின்னர் இடம்­பெறும் பாலியல் வன்­மு­றைகள் குறித்தும், அதில் விப­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது.
இந்த அறிக்­கையின் பார­தூ­ரத்­தன்மை இங்­குள்ள பெரும்­பா­லான ஊட­கங்­களால் கவ­னிக்­கப்­ப­ட­வில்லை. இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் ஏற்­க­னவே மனி­த­ உ­ரி­மைகள் விவ­கா­ரத்தில் சிக்­கல்­களை எதிர்­நோக்­கி­யுள்ள சூழலில், இதுவும் மற்­றொரு நெருக்­க­டி­யாக முளைக்கத் தொடங்­கி­யுள்­ளது.
இப்­போது, உலகில் ஒரு போரை நடத்­து­வ­தென்­பது, மிகவும் சிர­ம­மான விடயம்.  அது ஒரு தீவி­ர­வாத அமைப்­புக்கும் சரி, ஒரு அர­சாங்­கத்­துக்கும் சரி பொருத்­த­மான விட­யமே. இரண்டு மூன்று தசாப்­தங்­க­ளுக்கு முன்னர், மனி­த­ உ­ரி­மைகள் என்­பது பெரி­ய­தொரு விவ­கா­ர­மா­கவே இருந்­த­தில்லை.
கண்­ணி­வெ­டி­களை விதைப்­பது குற்­ற­மு­மல்ல. போரில் பாலியல் துன்­பு­றுத்­தல்கள் இடம்­பெ­று­வது, சிறு­வர்­களைப் படையில் சேர்ப்­பது எல்­லாமே அங்­கீ­க­ரிக்­கப்­பட்­ட­தாக இருந்­தன.
ஆனால், இப்­போது அப்­ப­டி­யில்லை.மனி­த­ உ­ரி­மைகள் என்ற விவ­காரம், இப்­போது ஒரு பெரிய இடத்தைப் பிடித்­துள்­ளது. மனி­த ­உ­ரி­மை­களை மீறாமல் போர் நடத்­தினால் தான், தப்­பிக்க முடியும்.
கண்­ணி­வெ­டி­களைப் பயன்­ப­டுத்­து­வதைத் தடுக்கும் ஒட்­டாவா உடன்­பாடு என்ற ஐ.நா. பிர­க­ட­னத்தை மதிக்க வேண்டும். இர­சா­யன ஆயு­தங்­களைப் பயன்­ப­டுத்த முடி­யாது.
சிறார்­களைப் படை­களில் ஈடு­ப­டுத்­தவோ, ஆட்­சேர்க்­கவோ முடி­யாது. இந்­த­வ­கையில் தான், இப்­போது மோதல்­களில் பாலியல் வன்­மு­றை­களைத் தடுப்­பது தொடர்பான ஓர் ஐ.நா. பிர­க­ட­னமும் செயற்­பாட்­டுக்கு வந்­தி­ருக்­கி­றது. இந்த உடன்­பாட்டில் இது­வரை 123 நாடுகள் கையெ­ழுத்­திட்­டுள்­ளன.
ஆனால், இலங்கை உள்­ளிட்ட பல நாடுகள், கண்­ணி­வெ­டி­களைப் பயன்­ப­டுத்­து­வதை தடுக்கும் உடன்­பாட்­டிலோ, பாலியல் வன்­மு­றை­களைத் தடுக்கும் உடன்­பாட்­டிலோ இன்­னமும் கையெ­ழுத்­தி­ட­வில்லை.
போரின் போதும், போருக்குப் பின்­னரும் தொடரும் பாலியல் வன்­மு­றைகள் தொடர்­பான கடந்த ஆண்­டுக்­கான அறிக்­கையில், இலங்­கையும் இடம்­பி­டித்­துள்ள நிலையில், இந்த உடன்­பாட்டில் கையெ­ழுத்­திட வேண்டும் என்ற அழுத்­தங்கள் அர­சாங்­கத்­துக்கு அதி­க­ரித்­துள்­ளன.
இந்த அறிக்­கையை இலங்கை அர­சாங்கம் நிரா­க­ரித்து விட்­டது. இந்த அறிக்கை வெளி­யி­டப்­பட்ட மறுநாள், ஐ.நா பாது­காப்புச் சபையில் ‘பெண்கள், அமைதி மற்றும் பாது­காப்பு’ என்ற தொனிப்­பொ­ருளில் ஒரு திறந்த விவாதம் இடம்­பெற்­றது.
அங்கு தான், இலங்­கையின் பிரதி நிரந்­தர விதி­விடப் பிர­தி­நி­தி­யான மேஜர் ஜெனரல் சவேந்­திர சில்வா, இலங்கை இரா­ணுவம் மீதான குற்­றச்­சாட்­டு­களை நிரா­க­ரித்­தி­ருந்தார்.
பாலியல் வன்­மு­றைகள் தொடர்­பான ஐ.நா. பொதுச் ­செ­ய­லரின் சிறப்புப் பிர­தி­நி­தி­யான சாய்னாப் ஹவா பங்­கு­ரா­வினால் சமர்ப்­பிக்­கப்­பட்ட ஐ.நா பொதுச்­செ­ய­லரின் அறிக்­கையில், போரில் பாலியல் வல்­லு­றவை இப்­போதும் ஆயு­த­மாகப் பயன்­ப­டுத்தி வரும் 34 ஆயு­தக்­கு­ழுக்கள், போரா­ளிக்­கு­ழுக்கள் மற்றும் அர­ச­ ப­டை­யி­னரின் விப­ரங்­களும் பட்­டி­ய­லி­டப்­பட்­டி­ருந்­தன.
இந்தப் பட்­டி­யலில் இலங்கை இரா­ணுவம் இடம்­பி­டிக்­காது தப்பிக் கொண்­ட­தை­யிட்டு அர­சாங்கம் நிம்­மதி கொள்­ளலாம்.
மத்­திய ஆபி­ரிக்க குடி­ய­ரசு, கொங்கோ, ஐவ­ரிகோஸ்ட், மாலி, தென்­சூடான், சிரியா ஆகிய நாடு­களைச் சேர்ந்­த­வையே இந்த 34 குழுக்கள் மற்றும் இரா­ணு­வங்­க­ளாகும்.
இந்தப் பட்­டி­யலில் இலங்கை இரா­ணுவம் இடம்­பெற்­றி­ருக்­கு­மே­யானால், அது, ஐ.நா அமை­திப்­ப­டைக்குப் படை­களை அனுப்பும் இலங்கை அரசின் நட­வ­டிக்­கைக்குப் பாதிப்பு ஏற்­பட்­டி­ருக்கும்.
எனினும், ஏற்­க­னவே ஐ.நா. அமை­திப்­ப­டையில் பணி­யாற்றும் இலங்கைப் படை­யினர் மீது பாலியல் குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்ட போதும், அவை சரி­யாக விசா­ரிக்­கப்­ப­ட­வில்லை என்­பதும் கவ­னிக்­கத்­தக்­கது.
இத்­த­கைய குற்­றச்­சாட்­டுகள் எழு­கின்ற போது, சம்­பந்­தப்­பட்ட படை­யி­னரை ஐ.நா தனது பணியில் இருந்து நீக்கி விடு­கி­றது.
ஆனால், சம்­பந்­தப்­பட்ட நாடு அது ­தொ­டர்­பாக மேல­திக நட­வ­டிக்கை எடுக்­கி­றதா என்று கண்­கா­ணிப்­ப­தில்லை.
எனவே, ஐ.நா. அமை­திப்­ப­டையில் இலங்கை இரா­ணு­வத்­தினர் சிலர் குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு உள்­ளா­கிய போதிலும், மேல் நட­வ­டிக்­கை­களில் இருந்து தப்பிக் கொண்­டனர்.
போரின் ­போது, இலங்கைப் படை­யினர், பாலியல் ரீதி­யான துன்­பு­றுத்­தல்­களை மேற்­கொண்­ட­தற்கு ஆதா­ர­மான பல ஒளிப்­ப­டங்கள், வீடி­யோக்கள் முன்னர் வெளி­யா­கி­யி­ருந்­தன.
உயி­ரு­டனோ இறந்த பின்­னரோ, பெண்­களின் உடை­களைக் களைந்து நிர்­வா­ணப்­ப­டுத்­து­வது கூட ஒரு­வ­கை­யான பாலியல் குற்­றம்தான். படைத்­த­ரப்­பினால் வெளி­யி­டப்­பட்ட பல ஒளிப்­ப­டங்­களே அத்­த­கைய குற்­றங்­க­ளுக்கு சாட்சி கூறத்­தக்­கவை.
அதிலும், இசைப்­பி­ரியா தொடர்­பாக சனல் 4 வெளி­யிட்ட ஒளிப்­ப­டங்­களும் வீடி­யோவும், இறு­திப்­போரின் இன்­னொரு பக்­கத்தை உல­கிற்குக் காட்­டி­யி­ருந்­தது.
அது­மட்­டு­மன்றி, கடந்த மார்ச் மாதம் ஐ.நா. மனி­த­ உ­ரி­மைகள் பேரவைக் கூட்­டத்­தொ­டரில் இலங்­கைக்கு எதி­ரான தீர்­மானம் நிறை­வேற்­றப்­ப­டு­வ­தற்கு முன்­ன­தாக, தென்­னா­பி­ரிக்­காவின் ஜஸ்மன் சூகா என்ற மனி­த ­உ­ரி­மைகள் சட்ட நிபுணர் தலை­மை­யி­லான குழு­வினர் இலங்­கையில் போரின் போதும், போருக்குப் பின்­னரும் இடம்­பெற்ற பாலியல் துன்­பு­றுத்­தல்கள் தொடர்­பான அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டி­ருந்­தனர்.
அதற்கு முன்னர், மனி­த­ உ­ரி­மைகள் கண்­கா­ணிப்­ப­கமும், இது­பற்­றிய அறிக்­கை­களை வெளி­யிட்­டி­ருந்­தது. ஆனால், இத்­த­கைய குற்­றச்­சாட்­டுகள் எல்­லா­வற்­றை­யுமே அர­சாங்கம் நிரா­க­ரித்து விட்­டது.
இப்­போது, இலங்­கைக்கு தனியே ஐ.நாவில் இருந்து மட்டும் நெருக்­கடி வர­வில்லை. மோதல்­களின் போது, பாலியல் வன்­மு­றை­களைத் தடுப்­பது தொடர்­பான சர்­வ­தேச உச்­சி­மா­நாடு ஒன்றை அடுத்த மாதம் பிரித்­தா­னியா நடத்­த­வுள்­ளது.
இந்த மாநாட்டில் உலகத் தலை­வர்கள் அனை­வ­ருக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. இந்­த­நி­லையில், ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச இந்த மாநாட்டில் பங்­கேற்­பாரா என்­பது தெரி­ய­வில்லை.
பெரும்­பாலும் அவர் அங்கு செல்­வ­தற்கு வாய்ப்­பில்லை என்றே கரு­தப்­ப­டு­கி­றது. ஆனால், இலங்கை அரசு தமது பிர­தி­நி­தி­களை அங்கு அனுப்பி வைக்­குமா என்று பார்க்க வேண்டும்.
ஏனென்றால், இலங்கை இன்னமும் பாலியல் வன்­மு­றை­களை தடுப்­ப­தற்­கான பிர­க­ட­னத்தில் கையெ­ழுத்­தி­டாமல் இருக்கும் நிலை­யிலும், பாலியல் வன்­மு­றைகள் தொடர்­பாக அதி­க­ரிக்கும் குற்­றச்­சாட்­டு­களும் இந்த மாநாட்டில் இலங்­கைக்கு அழுத்­தங்­க­ளாக இறங்­கலாம்.
போரின் போதும் போருக்குப் பின்­னரும் 17 படை­யினர் தான் வடக்கில் பாலியல் குற்­றங்­களில் ஈடு­பட்­டுள்­ள­தாக, நியூயோர்க்­கிலும் கொழும்­பிலும் இருந்து இலங்கை அரசு அறிக்­கை­களைச் சமர்ப்­பித்­துள்­ளது.
ஆனால், அதனை சர்­வ­தேச சமூகம் உண்­மை­யென்று ஏற்றுக் கொண்­டி­ருந்தால், கடை­சி­யாக வெளி­யான 21 நாடு­களின் பட்­டி­யலில் இலங்கை இடம்­பி­டித்­தி­ருக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டி­ருக்­காது.
அர­சாங்கம் இந்த விட­யத்தில் தனது பொறுப்பை நிறை­வேற்றத் தவ­றினால், அதுவும் கூட சர்வதேச விசாரணைகளுக்குள் இலங்கையை மாட்டிவிடக் கூடும்.
– ஹரி­கரன்
http://www.tamilwin.com/show-RUmsyFTYLYlq7.html

Geen opmerkingen:

Een reactie posten