தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 20 mei 2014

பொங்கல் பொங்கிய சிங்­க­ளக்­கு­டும்­பத்­தினர் பொங்­கலை இடை­ந­டுவில் கைவிட வேண்­டிய சூழல்

திருமலையில் சிங்கள குடும்பத்தினருக்கு நடந்த சோகம்...
திரு­கோ­ண­மலை அருள்­மிகு ஸ்ரீபத்­தி­ர­காளி அம்பாள் ஆல­யத்தில் நேர்த்தி கடன் கார­ண­மாக பொங்கல் பொங்கிய சிங்­க­ளக்­கு­டும்­பத்­தினர் பொங்­கலை இடை­ந­டுவில் கைவிட வேண்­டிய சூழல் நேற்­றுக்­காலை­ ஏற்­பட்­டது.

இது பற்றி மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

குறித்த குடும்­பத்­தைச்­சார்ந்த சுமார் 7 பேர் தமது குடும்ப நேர்த்­திக்­கடன் கார­ண­மாக காலை 7.00மணி­ய­ளவில் மூன்று பானை­களில் பொங்கல் செய்து கொண்­டி­ருந்­தனர்.ஒரு பொங்கல் நிறை­வ­டைந்த நிலையில் ஏனைய இரண்டு பொங்கல் பானை­களும் அடுப்பில் இருந்­தன.

இத­னைக்­கே­ள்வி­யுற்று அங்கு வந்த சில இரா­ணு­வத்­தினர் குறித்த பொங்­கலை நிறுத்­து­மாறு கோரினர். இன்­றைய நாளில் பொங்கல் செய்­ய­மு­டி­யாது எனவும் தெரி­வித்தனர். இதனை ஏற்­காத அந்­தக்­கு­டும்­பத்­தினர்

தமது நில­மை­களை விளக்­கப்­ப­டுத்­திய­துடன் தமது குடும்ப நேர்த்திக்கடனுக்காகவே இந்­தப்­பொங்­கலை செய்­வ­தா­கவும் சற்று நேரத்தில் முடித்து சென்று விடுவோம் எனவும் வேண்­டினர் அதனை ஏற்­றுக்­கொள்­ளாத படை­யினர் குறித்த பொங்­கலை அகற்­றுமாறு கடுமையாக அறி­வு­றுத்­தி­ய­துடன் அடுப்பில் நீரையும் உற்றி அணைத்தனர்.

இந்த நிலையில் பெரும் ஏமாற்றதுடன் குறித்த சிங்கள குடும்­பத்­தினர் அரை­கு­றை­யாக அவிந்த பொங்­க­லையும் அங்­கி­ருந்து எடுத்­துக்­கொண்டு வெளி­யே­றி­ய­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் அதிகளவிலான சிங்கள மக்களும் வழிபடுவது வழமையாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் நேற்று என்பதால் ஆலயங்களில் பொங்கல் பொங்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.
20 May 2014

Geen opmerkingen:

Een reactie posten