இலங்கையில் தமிழ் சிங்கள, மக்களின் ஒற்றுமையான வாழ்க்கையை ஐ.நாவின மனித உரிமை போரவை பிரிப்பதாக தெரிவித்து வவனியாவில் நேற்றுக்காலை (15) ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது. சிறிலங்கா சுதந்திர கட்சியின் வட மாகாண சபை உறுப்பினர் தர்மபால செனவிரத்தினவினால், ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இவ் ஊர்வலத்தில் சிங்கள், தமிழ் மக்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர். கலந்துகொண்டார்கள் என்று சொல்வதை விட கட்டாயமாக கலந்துகொள்ளவேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டார்கள் என்பதே பொருத்தமாகும். இதேவேளை இராணுவ அதிகாரிகளும் சிவில் உடையில் நின்று இவ் ஊர்வலத்தினை ஒழுங்கமைத்திருந்ததுடன் பேரூந்துகளில் பல இடங்களில் இருந்தும் பொது மக்களை ஏற்றி வந்திருந்தனர்.
அப்படி இருந்தும் ஆட்கள் போதாமை காரணமாக, தாமும் பொதுமக்கள் போல சிவில் உடைகளில் இராணுவத்தினரும் கலந்துகொண்டார்கள். படங்கள் இணைப்பு.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6536
Geen opmerkingen:
Een reactie posten