அதற்கு பின்னர் அவர் அக் கூற்றை கைவிட்டுவிட்டார். இதேவேளை அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான பிரேரணையின் கடுமையான தன்மை குறைக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கின்றது. இதற்கு இந்தியாவின் பங்களிப்பும் கிடைத்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார. மகிந்தரின் நெருங்கிய நண்பரான வாசுதேவ நாணயக்காரவின் இக் கூற்றில் இருந்தே இலங்கை அமெரிக்க தீர்மானம் தொடர்பாக எவ்வளவு மகிழ்சியில் இருக்கிறது என்பதனை நீங்கள் உணர்ந்துகொள்ள முடியும். இத் தீர்மானத்தை பிரித்தானிய ஆழும் கட்சியான கான்சர்வேட்டிவ் கட்சியும் ஆதரித்துள்ளது.
நடைபெறவுள்ள பிரித்தானிய தேர்தலில், தமிழர்களின் வாக்குகள் இனி யார்பக்கம் திரும்பும் என்பதனை நாம் சொல்லவே தேவையில்லை எனலாம்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6491
Geen opmerkingen:
Een reactie posten