தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 27 juli 2015

தீர்க்க தரிசனத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரபாகரனால் உருவாக்கப்பட்டது!-அதனால்த்தான் நீங்கள் இருக்க புலிகள் அழிந்தனரோ!



தீர்க்க தரிசனம் மிக்க பெரும் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்டது என வேட்பாளர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய கூட்மைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான சி.சிறீதரன் உரையாற்றுகையில்
மிக நீண்டு தமிழர் வரலாற்று வெளியில் நாம் மிக முக்கியமான காலகட்டத்தில் நிற்கின்றோம். எமது போராட்டம் துரதிஸ்டவசமாக அழிக்கப்பட்ட சூழ்நிலையிலும் எமது பெரும் தலைவர் பிரபாகரன் அவர்களால் தீர்க்க தரிசனத்துடன் எமது போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
இது வரலாற்றின் நீட்சியாக வந்த அமைப்பு இதை காக்கவேண்டியது எங்கள் அனைவரின் கடமை. இம்முறையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலத்தை சிதறடிக்க அடிவருடிக்கும்பல்கள் முனைந்தாலும் அதை எமது மக்கள் எதிர்வரும் தேர்தலில் தகர்த்தெறிவார்கள் என தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten