தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 29 juli 2015

பிரபாகரன் குறித்து தயா மாஸ்டர் குழப்பினாரா…? குழம்பினாரா…?


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தான் கூறியதாக வெளியாகிய செய்திகளில் எதுவித உண்மைத் தன்மைனயும் இல்லை என்று விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் தயா மாஸ்டர் கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தாக்கப்பட்டதன் பின்னரே கொலை செய்யப்பட்டதாக கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் அண்மையில் தெரிவித்தது உண்மையே என விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் தயா மாஸ்டர் கூறியுள்ளதாக இணையத்தளமொன்றில் செய்தி வெளியாகியிருந்தது.
இது தொடர்பில் வினவிய போது தாம் அவ்வாறு எதனையும், கூறவில்லை என்றும், இது தன்மீதுள்ள தனிப்பட்ட குரோதம் காரணமாக வெளியிடப்பட்ட செய்தி எனவும் அவர் குறிப்பிட்டதாக அவரது ஊடகச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தாக்கப்பட்டதன் பின்னரே கொலை செய்யப்பட்டதாக கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியதாக முன்னதாக செய்தகிள் வெளியாகியிருந்தன.
அத்துடன், கே.பி செய்த சூழ்ச்சியால் படையினரிடம் சரணடைந்த பிரபாகரன் கைது செய்யப்பட்டு நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டதாக தயா மாஸ்டர் கூறியதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே அந்த செய்தியில் உண்மையில்லை என தயா மாஸ்டர் தரப்பு கூறியுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten