தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 25 juli 2015

சட்டவிரோத ஆட்கடத்தல்களை தடுக்க இலங்கை ஒத்துழைப்பு! அவுஸ்திரேலியா பாராட்டு



சட்டவிரோத ஆட்கடத்தல்களை தடுக்க இலங்கை வழங்கி வரும் ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் ரொபின் மூடி, இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரட்னவை சந்தித்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள கடற்படைத் தலைமையகத்தில் நேற்று இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கடற்படைத் தளபதிக்கு அவுஸ்திரேலிய தூதுவர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இரு தரப்பு உறவுகள் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten