தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 21 juli 2015

வெளிநாட்டு ஆசாமியால் பருத்தித்துறை யுவதிக்கு வந்த கதி.

முகநூல் வரமா சாபமா என்ற பட்டிமன்றம் நடத்தலாம் போலுள்ளது. தினம்தினம் அப்படியான சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

பெரும்பாலானவர்கள் அதன் எல்லையை அறிந்து நடந்து
கொண்டாலும், ஒரு பகுதியினர் அதில் ஏமாந்த வண்ணமேயுள்ளனர்.
குறிப்பாக முகநூலின் ஊடாக  பெண்களை வளைத்து போட்டு, காரியம் சாதிப்பதற்கென்றே ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருக்கிறது.
இதற்கு உதாரணமாக அண்மையில் வடமராட்சியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
வெளிநாட்டில் வதியும் வாலிபனொருவன் யாழ்ப்பாண யுவதியை முகப்புத்தகத்தில் தொடர்பு கொண்டு, காதலிப்பதாக நடித்து, யாழ்ப்பாணம் வந்து யுவதியுடன் உறவு கொண்டு
கர்ப்பவதியாக்கிவிட்டு கம்பிநீட்டியுள்ளான்.
வடமராட்சியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
வடமராட்சியை சேர்ந்த 24 வயதான யுவதியே கர்ப்பவதியாக உள்ளார். கடந்த வருடம் ஜூன் மாதம்  நண்பியொருவரின் பிறந்ததின நிகழ்விற்கு இந்த யுவதி சென்றிருந்தார்.
அங்கு எடுக்கப்பட்ட  புகைப்படங்களை நண்பி தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்து, இந்த யுவதிக்கும் ரக் செய்திருந்தார்.
நண்பியின் முகப்புத்தக நண்பர் பட்டியிலிலுள்ள வாலிபன் ஒருவன், இந்த யுவதியின் படத்தை பார்த்து விட்டு நட்புகோரிக்கை விடுத்துள்ளான். கோப்பாயை சேர்ந்த இந்த வாலிபன் தற்போது
ஐரோப்பிய நாடொன்றில் வசித்து வருகிறான்.
வாலிபனின் நட்பு கோரிக்கையை யுவதி ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து, வாலிபன் கடலை போட்டு யுவதியை தனது வலைக்குள் வீழ்த்தி விட்டான்.
30 வயதான, திருமணம் முடிக்காத ஆள் என தன்னை  அறிமுகம் செய்துள்ளான். பின்னர் காதல் கோரிக்கை விடுத்துள்ளான். யுவதியும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளார்.
இருவரும் பேஸ்புக்கில் காதலித்தனர். யுவதியை விரைவில் திருமணம் செய்வதாக வாலிபன் வாக்குறுதியளித்துள்ளான். பின்னர் கடந்த மே மாதம் வாலிபன் திடீரென யாழ்ப்பாணம் வந்துள்ளான்.
ஜூலை மாதம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமென வாலிபன் வாக்குறுதியுமளித்தான்.
பின்னர் யாழிலுள்ள பல இடங்களிற்கும் அழைத்துச சென்று உல்லாசம் அனுபவித்துள்ளான்.
இரண்டு வாரம் உல்லாசம் அனுபவித்து விட்டு பிரியாவிடை பெற்றான்.
அதன்பின்னர் யுவதியுடனான சகல தொடர்பையும் நிறுத்தி, தனது முகநூல் கணக்கையும் செயலிழக்கச் செய்து விட்டான்.
தற்போது யுவதி ஒன்றரைமாத கர்ப்பிணியாக உள்ளமை தெரிய வந்துள்ளது. உடலில் ஏற்பட்ட மாற்றத்தையடுத்து பெற்றோர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதே விடயம் வெளிச்சத்திற்கு வந்தது.
இது தொடர்பில் பருத்தித்துறை பொலிசாரிடமும் முறையிடப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten