தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 september 2014

ஜெயலலிதா குற்றவாளியே: 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை... நீதிமன்றம் அதிரடி (வீடியோ இணைப்பு)

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 1991 முதல் 1996ம் ஆண்டு வரை முதலமைச்சராக பதவி வகித்தபோது, ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996ம் ஆண்டு சுப்ரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அப்போது தொடங்கி சுமார் 18 ஆண்டுகள் வரை இந்த வழக்கு, பெங்களூரின் அக்ரஹாரம் பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை 11 மணிக்கு நீதிபதி மைக்கேல் டி.குன்ஹாவி தலைமையில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி ஆகியோரும் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் பெங்களூர்-தமிழ்நாடு இடையே உள்ள பேருந்து சேவை நிறுத்தப்பட்டதுடன், சுமார் 6 ஆயிரம் பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டாம் இணைப்பு:
சுமார் 10.45 மணியளவில் நீதிமன்றத்திற்குள் நுழைந்தார் ஜெயலலிதா.
நீதிபதி குன்ஹா 11.25 மணியளவில் தீர்ப்பினை வாசிக்க ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று பிற்பகல் 1.00 மணிக்கு தீர்ப்பு வெளியாகுமென ஜெயலலிதாவின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
மூன்றாம் இணைப்பு:
சற்று முன் ஜெயலலிதா நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்து, சில நிமிடங்கள் காரில் ஓய்வெடுத்துவிட்டு, அமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்தை அழைத்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நான்காம் இணைப்பு:
சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் தெரிவித்துள்ளார். நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா இந்த தீர்ப்பை வாசித்துள்ளார்
6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடைவிதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

http://www.newindianews.com/view.php?224OlX2bcK40M04ecSMMd02eKmD2dd3DDmA30306Am2e4e04S2cb4lOyb3
ஜெயலலிதாவின் தீர்ப்பு: விழி பிதுங்கும் ஐடி ஊழியர்கள்...குட்டி சென்னையான பெங்களூர்
[ சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2014, 05:59.58 AM GMT +05:30 ]
தமிழக முதலவர் ஜெயலலிதாவை வரவேற்க பெங்களூர் நகரின் பெரும்பாலான பகுதிகளில் அதிமுகவினர் பிளக்ஸ் போர்டுகளை வைத்துள்ளனர்.
அதிமுகவினர் குவிவதால் பெங்களூர்-ஒசூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
எச்.ஏ.எல் விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக பரப்பன அக்ஹாரா பகுதியிலுள்ள நீதிமன்றத்துக்கு ஜெயலலிதா வருவார் என்ற எதிர்பார்ப்பில் அதிமுகவினர் ஒசூர் சாலையின் பல பகுதிகளில் சாலையின் நடுவே பிளக்ஸ் போர்டுகளை வைத்துள்ளனர்.
அதில் ஜெயலலிதா புகைப்படத்திற்கு கீழே அதிமுக நிர்வாகிகள் புகைப்படங்களை பொறித்து, வெற்றி நமதே என்பது போன்ற வார்த்தைகளை இடம் பெறச் செய்துள்ளனர்.
மேலே கன்னடத்திலும், அதற்கு கீழே, தமிழிலும் வாசகங்கள் பொறிக்கப்பட்டு வரவேற்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
அதிமுகவினர் அணி அணியாக திரளுவதால் ஒசூர ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இங்குதான் இன்போசிஸ், விப்ரோ உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்த எலக்ட்ரானிக் சிட்டி உள்ளது.
எனவே அங்கு வேலைக்காக செல்லும் ஐடி ஊழியர்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்துள்ளனர்.
கட்-அவுட், கரைவேட்டி, போன்றவற்றால் பெங்களூர் அதிலும் தெற்கு பெங்களூர் குட்டி சென்னையாக மாறிப்போயுள்ளது.
http://www.newindianews.com/view.php?224OlX2bcA40M04ecSMMd02eKmD2dd3DDmA30306Am2e4e04S2cb4lOyb3

Geen opmerkingen:

Een reactie posten