தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 20 april 2013

அரசியல் நோக்கங்களுக்காக தமிழக அரசியல்வாதிகள் இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்கின்றனர் – றோ!


தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்கான வயதெல்லை 15 ஆக குறைப்பு!
[ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 05:50.04 AM GMT ]
ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்கான வயதெல்லையை 15 ஆகக் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகத் திட்டத்திற்கு அமைவாக இந்த வயதெல்லை குறைப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் சரத் குமார குறிப்பிட்டார்.
இதற்கான சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அரசியல் நோக்கங்களுக்காக தமிழக அரசியல்வாதிகள் இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்கின்றனர் – றோ
[ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 05:59.51 AM GMT ]
அரசியல் நோக்கங்களை முன்னிலைப்படுத்தியே தமிழக அரசியல்வாதிகள் இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்து வருவதாக இந்திய உளவுப் பிரிவான றோ தெரிவித்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது,
தமிழக அரசியல்வாதிகள் இலங்கை எதிர்ப்பு போராட்டங்களை அரசியல் இராஜதந்திரமாகவே கருத வேண்டும் என இந்தியாவின் றோ புலனாய்வு பிரிவின் முன்னாள் விசாரணை ஆய்வாளர் ஜோதி சிங் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர்கள் மீது இந்திய அரசியல் கட்சிகளுக்கு மெய்யான அக்கறை எதுவும் கிடையாது.
உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால், போரின் இறுதிக்கட்டத்தில் அவ்வாறான போராட்டங்களை நடத்தியிருக்க முடியும்.
2014ம் நடைபெறவுள்ள இந்திய பொதுத்தேர்தலை இலக்கு வைத்தே தமிழக அரசியல் கட்சிகள் இலங்கைக்கு எதிரான இந்த பாரிய பிரசாரங்களை ஆரம்பித்துள்ளன.
2014ம் ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்தலில் தமிழகத்தில் உள்ள தமது கூட்டணி கட்சிகளை தம்முடன் வைத்து கொள்வதற்காகவே இந்தியா இலங்கைக்கு எதிராக, மனித உரிமை பேரவையில் வாக்களித்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten