இலங்கையின் சண்டே லீடர் ஆங்கில பத்திரிகையின் செய்தியாளர் பாராஸ் சௌகாட்டலி (Faraz Shaukatally) வெள்ளிக்கிழமை நள்ளிரவில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானார். இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தின் போது கழுத்தில் காயமடைந்த நிலையில் அவர் உடனடியாக களுபோவில வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது வீட்டில் வைத்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அவரது கழுத்தில் துப்பாக்கி சன்னங்கள் பாய்ந்துள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2ம் இணைப்பு
சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் மீது துப்பாக்கிச் சூடு சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் பாரூக் சவுகத்தலி என்பவரின் மீது இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது. பாரூக்கின் வீட்டுக்குள் பிரவேசித்த மூன்று இனந்தெரியாத நபர்கள் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பாரூக், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கழுத்துப் பகுதியில் துப்பாக்கிச் சன்னம் பாய்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், உயிராபத்து எதுவும் கிடையாது என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4556
| President orders immediate probe into journalist shooting |
| [ Saturday, 16 February 2013, 05:10.50 AM GMT +05:30 ] |
| Faraz suffered injuries to his neck after unidentified gunmen opened fire at him at his residence in Mt. Lavinia last night. The journalist is said to be in critical condition and is currently undergoing treatment in the Intensive Care Unit (ICU) of the Colombo National Hospital. http://eng.lankasri.com/view.php?224Old0acp5YOd4e3KMC302cAmB3ddeZBmI203eWAA2e4oY5naca3lOo42 |
Geen opmerkingen:
Een reactie posten