பின்னர் அச் சிங்களவர்களைப், பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள். இங்குள்ள காணொளியில், நீல நிற ரீ- சேட்டுடன் பொலிசாரால் அழைத்துச் செல்லப்படுபவர், ஒரு சிங்களவர் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். ஈழத் தமிழர்களுக்கு ஒரு விடையம் நினைவில் இருக்கலாம். 1956ம் ஆண்டு, தமிழர்கள் பாராளுமன்றம் முன்பாக அமிர்தலிங்கம் தலைமையில் இதுபோன்றதொரு ஒரு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதும் சிங்கள காடையர்கள் அங்கே புகுந்து அவர்களை அடித்தார்கள். அப்போது அடிவாங்கிய அமிர்தலிங்கம் அவர்கள், விம்மி விம்மி அழுதவாறு, மக்களே இங்கிருந்து சென்றுவிடுங்கள் ! கலைந்து போங்கள் என்று கூறினார். பின்னர் அவர் எழுந்து பாராளுமன்றத்துக்கு உள்ளே சென்றவேளை, அவரைப் பார்த்து சிரித்த சிங்களத் தலைவர்கள், ... இதோ தளபதி வருகிறார் என்று சொல்லி பரிகாசம் செய்தார்கள். அது அன்று ! ஆனால் இன்று வலி-வடக்கு மக்கள் சிங்கள காடையர்களை மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள் இது இன்று நடந்தது !
இவை அனைத்துக்கும் காரணம் தமிழ் மக்களிடையே தோன்றிய விடுதலைப் புலிகள் என்னும் சக்திதான் ! எமது தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் வழிகாட்டல் தான் ! ... என்பதனை எவரும் மறுத்துவிடமுடியாது !
அதிர்வுக்காக:
வல்லிபுரத்தான்.
Geen opmerkingen:
Een reactie posten