[ செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 05:48.17 AM GMT ]
உதிரவேங்கை ஆலய நிர்வாகத்தால் நேற்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த பின்னரே நீதிபதி இந்த இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
என்னால் ஊடகங்களின் கழுத்தை நெரிக்கவும் முடியும், ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் முடியும் என்று அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
குறித்த ஆலயத்தை ஆக்கிரமித்துள்ள சிங்கள வர்த்தகர் ஒருவர் தான் இங்கே வர்த்தக நிலையம் அமைக்கப் போவதாக தெரிவித்து ஆலய வளாகத்திற்குள் கட்டடம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஏ-9 நெடுஞ்சாலையில் இந்த ஆலயம் அமைந்துள்ளதால் தமக்கு வியாபாரம் நன்றாக நடைபெறும் என்பதை சாதகமாகப் பயன்படுத்தியே இந்த சிங்களவர் இங்கே வர்த்த நிலையம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
சிங்களப் படையினர் மற்றும் சிங்களக் காவல்துறை ஆகியோரின் ஒத்துழைப்புடனேயே இவர் இந்த ஆக்கிரமிப்பை மேற்கொண்டு வருகின்றார்.
கடந்த வியாழக்கிழமை மேற்படி ஆலயம் உடைக்கப்பட்டு இங்கிருந்த பெறுமதியான விக்கிரகங்களும் திருடப்பட்டிருந்தன.
இது குறித்து கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் எதுவுமே செய்ய முடியாத ஆலய நிர்வாகம் நேற்று கிளிநொச்சி நீதிமன்றில் முறைப்பாடு வழக்குத் தாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி எதிர்வரும் 20ம் திகதி குறித்த சிங்களவரை மன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
இந்தக் காணியை தனக்குச் சொந்தமானது என்று நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் ஏதும் இருந்தால் அதையும் எடுத்து வருமாறும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
அதுவரை இந்த ஆலய வளாகத்தில் எந்தவொரு கட்டுமானப் பணிகளையும் முன்னெடுக்க வேண்டாம் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான உத்தரவை காவல்துறையினரின் உதவியுடன் குறித்த காணியில் ஒட்டுமாறும் நீதிபதி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து குறித்த படிவம் காணியில் ஒட்டப்பட்டுள்ளது.
என்னால் ஊடகங்களின் கழுத்தை நெரிக்கவும் முடியும்! எதிராக நடவடிக்கை எடுக்கவும் முடியும்! டக்ளஸ்
[ செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 06:15.46 AM GMT ]
யாழ். நகரில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றின் பின்னர் பத்திரிகையாளர்களைத் தனியே அழைத்து அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வடகடல் நிறுவனத்தின் புதிய இயந்திரங்களின் பணிகளைத் தொடக்கி வைக்கும் நிகழ்வு நேற்று நடந்தது.
அதன் பின்னர் பத்திரிகையாளர்களைத் தனியே அழைத்துப் பேசினார் அமைச்சர்.
வடமாகாண தேர்தல் மற்றும் வலி.வடக்கு மீள்குயமர்வு என்பன குறித்துத் தனது வழமையான கருத்துக்களைத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ், தனது பேச்சை ஒலிப்பதிவு செய்வதை நிறுத்துமாறு ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த பின்னர் மிரட்டல் பாணியில் கருத்துத் தெரிவித்தார்.
என்னுடன் கதைத்து விட்டு வேறு ஏதாவது எழுதினால் என்னால் உடனடியாக நடவடிக்கை எடுக்க இயலும், கழுத்தையும் நெரிக்க இயலும் என்றார் அமைச்சர்.
அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்களிடம் அமைச்சரின் மிரட்டல் பாணியிலான கருத்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பொது இடத்தில் வைத்து பகிரங்கமாகத் தாம் மிரட்டப்பட்டமை ஊடக சுதந்திரத்திற்கு அமைச்சரால் விடுக்கப்படும் அச்சுறுத்தல் என்று ஊடகவியலாளர்கள் கூறினர்.
Geen opmerkingen:
Een reactie posten