தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 10 mei 2013

த.தே.கூட்டமைப்பு பதிவு செய்வது தொடர்பாக கட்சிகளுக்கிடையே இன்று கலந்துரையாடல்


கேரளாவில் உற்பத்தி செய்யப்பட்ட கஞ்சாவுடன் மன்னாரில் ஒருவர் கைது
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 06:04.23 AM GMT ]
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட கஞ்சாவுடன் மன்னார் நகரில் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் - சவுத்பார் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் சவம் இருந்து 1 கிலோ 300 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் இன்று வெள்ளிக்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

த.தே.கூட்டமைப்பு பதிவு செய்வது தொடர்பாக கட்சிகளுக்கிடையே இன்று கலந்துரையாடல்
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 06:17.29 AM GMT ]
தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வது உள்ளிட்ட பல தரப்பட்ட விடயங்கள் தொடர்பாக கட்சிகளுக்கிடையே இன்றைய தினம் கலந்துரையாடப்படவுள்ளன.
இது தொடர்பான சந்திப்பு ஒன்று இன்று மாலை கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனுடன் இடம்பெறவுள்ளதாக டெலோ இயக்கத்தின் பிரசார செயலாளர் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten