தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 20 april 2013

இலங்கை அகதிகள் தமது சட்டத்தரணிகளை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது: ஆஸி. ஊடகம் குற்றச்சாட்டு!!


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர் பீடத்தை உடனடியாக கூட்டுமாறு கோரிக்கை!
[ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 09:18.15 AM GMT ]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர் பீடத்தை உடனடியாக கூட்டுமாறு அதன் உறுப்பினர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் கட்சியின் தலைமைக்கு அவர்கள் விசேட கடிதம் ஒன்றையும் அனுப்பி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது காணப்படுகின்ற சூழ்நிலையில் அரசாங்கத்துடன் இணைந்திருப்பதா, அல்லது விலகுவதா என்பது தொடர்பில் விவாதிப்பதற்காகவே உயர்பீடத்தைக் கூட்டுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியலில் பயணிப்பதற்கு, கட்சியினுள் காணப்படுகின்ற முரண்பாடுகள் தீர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் அதன் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை அகதிகள் தமது சட்டத்தரணிகளை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது: ஆஸி. ஊடகம் குற்றச்சாட்டு
[ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 09:51.33 AM GMT ]
அண்மையில் அவுஸ்திரேலியாவில் இருந்து  நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள், தமக்கான சட்டத்தரணிகளை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சட்ட விரோதமான முறையில் படகு ஒன்றின் மூலம் அகதிகளாக சென்ற 66 பேருள், 39 பேர் கடந்த வியாழக்கிழமை நாடுகடத்தப்பட்டிருந்தனர்.
அவர்கள் நாடு கடத்தப்படுவதற்கு முன்னர் சட்டத்தரணி ஊடாக அவர்கள் நேர்மையான அகதிகள் என்பதை நிரூபிக்க வாய்ப்பளித்திருக்க வேண்டும். எனினும் இலங்கையர்கள் விடயத்தில் அவ்வாறு இடம்பெறவில்லை என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten