பிராந்திய வலயத்தின் சீனத் தலையீடுகளை முறியடிக்கும் வகையில் இவ்வாறு அமெரிக்கா, மாலைதீவில் முகாம் அமைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். 1980களில் அமெரிக்கா இலங்கையில் முகாம் அமைக்க முயற்சி செய்தாகவும், அதனை இந்தியா முறியடித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை பயன்படுத்தி யுத்தத்தை ஏற்படுத்தி இந்தியா இந்த முயற்சியை முறியடித்தது என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க போர்க் கப்பல்கள் மற்றும் விமானங்கள் போன்றன குறித்த முகாமில் நிலைநிறுத்தப்படும் எனவும் இது ஒட்டு மொத்த பிராந்திய வலயத்திற்கே அச்சுறுத்தலாக அமையும் எனவும் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten