தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 3 mei 2013

இலங்கையின் பொருளாதாரம் பெரும் ஆபத்தில் உள்ளது: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை


இராணுவத்தினர் புடைசூழ பத்திரிக்கை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் கிளை யாழ்ப்பாணத்தில் திறப்பு
[ வெள்ளிக்கிழமை, 03 மே 2013, 04:18.35 PM GMT ]
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் புடைசூழ இலங்கை பத்திரிக்கை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் கிளை அலுவலகம் ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ். புகையிரத நிலையத்திற்கு அருகில் வீரகேசரி அலுவலகத்திலேயே இக்கிளை அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள், ஆசிரியர்கள், இராணுவத்தினர், பொலிஸார், கடற்படையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இலங்கையின் பொருளாதாரம் பெரும் ஆபத்தில் உள்ளது: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 03 மே 2013, 09:23.02 AM GMT ]
இலங்கையின் பொருளாதார நிலைமைகள் குறித்து சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பணவீக்க வீதம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென சர்வதேச நாணய நிதிய திரைசேரி செயலாளர் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கடந்த மாதங்களுடன் ஒப்பீடு செய்யும் போது பொருட்களுக்கான விலைகள் ஏப்ரல் மாதத்தில் குறைந்தளவே உயர்வடைந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், பணவீக்கம் உயர்வடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
நிதிக்கொள்கை தொடர்பான நிபந்தனைகளை அரசாங்கம் வலுவாக பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின்சாரக் கட்டண உயர்வு ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்தையுமே பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten