யாழில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களை இனந்தெரியாத நபர்கள் தாக்க முற்பட்டதைத் தொடர்ந்து பொது மக்களும் தமது பாதுகாப்பிற்காக அவர்களைத் தாக்கி விரட்டியடித்தனர்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் இனந்தெரியாத நபர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடையே புகுந்து அவர்கள் கைகளில் வைத்திருந்த பதாகைகளை பறித்து கிழித்தெறிந்ததுடன் உண்ணாவிரதம் முடிவடைந்துவிட்டது ஓடுங்கள் என்று கூறி தாக்கியுள்ளனர்.
இதேவேளை, உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஏனையவர்கள் உடனடியாக சென்று குறிப்பி;ட்டவர்களை சுற்றி நின்றவேளையில் அவர்கள் பொது மக்களை மேலும் தாக்க முற்பட்டதைத் தொடர்ந்து பொது மக்களும் தமது பாதுகாப்பிற்காக அவர்களைத் திருப்பித்தாக்கவே அவர்கள் தப்பி ஓடத் தொடங்கினார்.
இந்நிலையில், பொது மக்கள் தொடாந்து விரட்டியதுடன் அங்கு காவல் கடமையில் நின்ற பொலிசாரிடம் முறையிட்டபோதும் குறிப்பிட்ட நபர்களை கைது செய்வதற்க்கு பொலிசார் எந்த வகையான நடவடிக்கையும் எடுக்காததுடன் பொது மக்களால் பிடிக்கப்பட்ட ஒருவரை பொலிசாரிடம் ஒப்படைத்து போதிலும் பொலிசார் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்று குறிப்பிட்ட இடத்திற்கு அப்பால் கொண்டு சென்று தப்பிச்செல்ல விட்டுள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten