புலம்பெயர்ந்த தமிழர்கள் முள்வேலி முகாமுக்குள் இருக்கும் தமிழர்கள் இவர்களின் நிலை என்ன கதி என்ன? போன்ற ஏராளமான வினாக்களுக்கு விடை தெரியாத நிலையில் மஹிந்த ராஜபக்ஷ சுற்றுப்பயணங்களை மேற்கொள்கின்றார்.
அவரின் இந்திய வருகைக்கு தமிழகமெங்கும், இந்தியா முழுவதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையிலும் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு வரத்தான் வேண்டுமா? என்ற மையக் கருத்தோடு இந்திய தொலைக்காட்சியில் விவாத மேடை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
இவ் விவாத மேடையில், தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், கங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கடலூர் தொகுதி நாடாளுமற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி, திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மூத்த பத்திரிகையாளர் முராரி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இவ் விவாத மேடையில் இடையிடையே மூத்த பத்திரிகையாளரான சோ அவர்களின் கருத்துக்களும் ஒளிபரப்பட்டுள்ளது.
விவாத கருத்துக்களுக்கு......
Geen opmerkingen:
Een reactie posten